பதிவுகள்

Saturday 29 December 2012

சொல்ல வேண்​டிய நேரம்

புது​தில்​லி​யில் பாலி​யல் கொடு​மைக்கு எதி​ரான போராட்​டத்​தால் மத்​திய அரசு அறி​வித்த,​​ உச்ச நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதி​பதி ஜே.எஸ்.​ வர்மா தலை​மை​யி​லான மூவர் குழு தனது பணியை உடனே தொடங்​கி​விட்​டது.​ ​
​ பெண்​க​ளின் மீதான பாலி​யல் குற்​றங்​க​ளைத் தடுப்​பது குறித்​தும்,​​ இதற்​கான தண்​ட​னை​கள்,​​ வழக்கு நடை​மு​றை​கள் குறித்தும் பொது​மக்​கள் தங்​கள் ஆலோ​ச​னை​களை இணை​ய​த​ளத்​தின் மூல​மா​க​வும் ​(த்ன்ள்ற்ண்​ஸ்ரீங்.ஸ்ங்ழ்ம்​ஹ​ஃய்ண்ஸ்ரீ.ண்ய்)​ தொலை​ந​கல் மூல​மா​க​வும் ​(011-23092675) தெரி​விக்​க​லாம் என்று இக்​குழு அழைப்பு விடுத்​துள்​ளது.​ ​
​ இத்​தனை நாள்​க​ளாக சமூ​க​வ​லைத்​த​ளங்​க​ளில் கருத்து தெரி​வித்​தும்,​​ போராட்​டங்​க​ளுக்கு அழைப்பு விடுத்​தும் எதிர்ப்​புத் தெரி​வித்​துக்​கொண்​டி​ருந்த அனை​வ​ரும் இனி தங்​கள் கோரிக்​கைக்கு தாங்​களே வலு சேர்க்க வேண்​டிய பொறுப்​பும் கட​மை​யும் இப்​போது ஏற்​பட்​டுள்​ளது.​ அவ​ர​வர் தங்​கள் ஆலோ​ச​னை​கள் வழங்​க​வேண்​டிய நேரம் வந்​துள்​ளது.​
​ டிசம்​பர் 16-ஆம் தேதி துணை​ம​ருத்​துவ மாண​விக்கு ஏற்​பட்ட துய​ரச் சம்​ப​வத்​தில் ​ அனைத்து நட​வ​டிக்​கை​க​ளும் வெகு​வி​ரை​வாக எடுக்​கப்​பட்​டுள்​ளன.​ இரண்டு காவல் துணை ஆணை​யர்​க​ளின் பணி​யிடை நீக்​கம்;​ குற்​ற​வா​ளி​கள் 6 பேர் மறு​நாளே கைது;​ விரை​வு​நீ​தி​மன்​றம் ஜன​வரி 3-ஆம் தேதி​மு​தல் நாள்​தோ​றும் விசா​ரணை நடத்​தும் என்ற அறி​விப்பு;​ தில்​லி​யில் பெண்​க​ளின் அவ​சர உத​விக்கு தொலை​பேசி எண் 181 என பல்​வேறு நட​வ​டிக்​கை​கள் எடுக்​கப்​பட்​டுள்ள நிலை​யில் தில்லி மக்​கள் தங்​கள் போராட்​டத்தை நிறுத்​திக்​கொள்​வதே சரி​யா​ன​தாக இருக்​கும்.​ இப்​போது இந்த கோபம் முழு​வ​தும்,​​ புதிய நடை​முறை,​​ புதிய சட்​டம் உரு​வாக்​கு​வ​தற்​கா​கத் திருப்​பி​வி​டப்​பட வேண்​டும்.​
​ மத்​திய அர​சின் பெண்​கள் மற்​றும் சிறார் மேம்​பாட்டு அமைச்​ச​கத்​தின் புள்​ளி​வி​வ​ரப்​படி,​​ 2011-ஆம் ஆண்டு இறு​தி​யில் வல்​லு​றவு வழக்​கு​க​ளின் எண்​ணிக்கை 95,065.​ இதில் 79,476 வழக்​கு​க​ளின் விசா​ரணை நிலு​வை​யில் உள்​ளது.​ பாலி​யல் அத்​து​மீ​றல் ​(ஙர்ப்ங்ள்ற்​ஹற்ண்ர்ய்)​ வழக்​கு​கள் 1,92,160.​ இதில் விசா​ரணை நிலு​வை​யில் இருப்​பவை 1,62,777.​
​ பெண்​கள் மீதான பாலி​யல் அத்​து​மீ​றல்,​​ பாலி​யல் அணுக்​கம்,​​ பாலி​யல் வன்​முறை,​​ பாலி​யல் மிரட்​டல்,​​ வல்​லு​றவு போன்ற வழக்​கு​கள் விரைந்து முடிக்​கப்​ப​டா​மல்,​​ பல ஆண்​டு​கள் தள்​ளிப்​போ​டப்​ப​டு​வ​தற்​குக் கார​ணம்,​​ நீதித்​துறை மட்​டுமே அல்ல.​ வழக்​கு​ரை​ஞர்​க​ளும் கார​ணம்.​ ஆகவே இத்​த​கைய வழக்​கு​க​ளில் தொடர்ச்​சி​யாக விசா​ரணை நடத்தி,​​ உட​ன​டி​யா​கத் தீர்ப்பு வழங்​கு​வது மட்​டுமே பாதிக்​கப்​பட்ட பெண்​ணுக்கு நியா​யம் கிடைக்க வழி​செய்​யும்.​ விரைவு நீதி​மன்​றம் அமைப்​பது மட்​டு​மின்றி,​​ இந்த வழக்​கு​க​ளில் வாய்தா வழங்​கக்​கூ​டாது என்​கின்ற நீதித்​துறை நடை​முறை மிக இன்​றி​ய​மை​யா​தது.​
​ மேலும்,​​ இத்​த​கைய வழக்​கு​க​ளில்,​​ பெண்​கள் வெளிப்​ப​டை​யாக பேச​மு​டி​யா​மல் கூசிட வைக்​கும் நீதி​மன்ற நடை​மு​றை​க​ளி​லும் மாற்​றம் தேவை.​ பாலி​யல் கொடு​மைக்கு இலக்​கான ஒரு பெண்,​​ தனது வாக்​கு​மூ​லத்தை ஒரு பெண் நீதி​ப​தி​யி​டம் மட்​டுமே சொல்​வேன்,​​ தன்​னி​டம் கேள்​வி​கேட்​கும் எதிர்த் தரப்பு வழக்​கு​ரை​ஞர் ஒரு பெண்​ணாக இருக்க வேண்​டும் என்று வலி​யு​றுத்த முடி​யாத நிலை​யில் பாதிக்​கப்​பட்ட பெண் பல​வற்றை வெளிப்​ப​டை​யா​கச் சொல்ல முடி​யா​மல் தவிக்​கி​றார்.​ ​ ஒரு பெண் தனக்கு இழைக்​கப்​பட்ட பாலி​யல் கொடு​மையை கூச்​ச​மின்​றி​யும்,​​ வார்த்​தை​களை முழுங்​கா​ம​லும் சொல்​வ​தற்கு பெண்​நீ​தி​பதி அல்​லது காவல்​துறை பெண் அதி​கா​ரி​யி​டம் மட்​டுமே இய​லும்.​ எதிர்த்​த​ரப்பு வழக்​கு​ரை​ஞர் பெண்​ணாக இருந்​தால்​தான்,​​ ஒரு ஆண் வழக்​கு​ரை​ஞர் கேட்​கக்​கூ​டிய வக்​கி​ரம் பொதிந்த கேள்​வி​களை அந்​தப் பெண்​வ​ழக்​கு​ரை​ஞர் கேட்​டா​லும்​கூட,​​ அதற்கு பாதிக்​கப்​பட்ட பெண் துணிச்​ச​லு​டன் பதில் அளிக்க ​ சாத​க​மாக இருக்​கும்.​ பாலி​யல் கொடுமை தொடர்​பான வழக்​கு​க​ளில் தன்னை விசா​ரிக்​கும் காவல்​துறை அதி​காரி,​​ வழக்​கு​ரை​ஞர்,​​ நீதி​பதி அனை​வ​ரும் பெண்​க​ளா​கத்​தான் இருக்க வேண்​டும் என்​பது அந்த பாதிக்​கப்​பட்ட பெண்​ணின் உரி​மை​யாக மாற்​றப்​பட வேண்​டும்.​
​ அடுத்​த​தாக,​​ இத்​த​கைய வழக்​கு​க​ளில் அதி​க​பட்​ச​மான தண்​ட​னை​யாக மரண தண்​டனை விதிக்​கப்​பட வேண்​டும் என்று கோரிக்கை வைக்​கப்​ப​டு​கி​றது.​ இந்த ஆலோ​ச​னையை இந்​தக் குழு​வி​டம் பொது​மக்​கள் தெரி​விக்​க​லாம்.​ இத்​த​கைய வழக்​கு​க​ளில் தண்​ட​னையை கடு​மை​யாக்க வேண்​டும் என்​ப​தில் சந்​தே​கம் இல்லை.​ ஆனால்,​​ மரண தண்​டனை கூடாது என்​றும்,​​ தீவி​ர​வாத வழக்​கில் மரண தண்​டனை பெற்ற அப்​சல் குரு உள்​ளிட்ட அனை​வ​ரை​யும் மன்​னித்து,​​ தண்​ட​னைக் குறைப்பு செய்ய வேண்​டும் என்​றும் கருத்​து​ரு​வாக்​கம் நடை​பெற்​றுக்​கொண்​டி​ருக்​கும் சூழ​லில்,​​ பாலி​யல் கொடு​மைக்கு மர​ண​தண்​ட​னையை நீதி​ப​தி​கள் பரிந்​து​ரைப்​பார்​கள் என்​பது சந்​தே​கமே!​
​ புது​தில்​லி​யில்,​​ நன்கு படித்த,​​ நாக​ரீக இளம்​பெண்​கள் தாங்​கிய பதா​கை​க​ளில் காணப்​பட்ட வாச​கங்​கள் பல​வும் மேலை நாடு​க​ளில் இதே​போன்ற எதிர்ப்​பு​க​ளின்​போது எழு​தப்​பட்​ட​வற்​றின் மறு​பி​ர​தியே.​ ஆனால் தமிழ்​நாட்​டில்,​​ சில ஆர்ப்​பாட்​டங்​க​ளில் பெண்​கள் தமி​ழில் எழுதி வைத்​தி​ருந்த பதாகை சற்று வித்​தி​யா​ச​மா​னது-​ "பாலி​யல் வெறி​யைப் பரப்​பும் சினி​மாக்​கள் தொலைக்​காட்சி நிகழ்ச்​சி​களை ஒழித்​துக்​கட்ட வேண்​டும்'.​ இந்த வாச​கம் இன்​றைய பிரச்​னையை மிக நேர்​மை​யாக அணு​கு​கின்​றது.​​ மன​தில் விதைக்​கப்​ப​டும் எண்​ணங்​கள்​தான் செய​லாக மாறு​கின்​றன.​ ​
பாலி​யல் கிளர்ச்​சி​யைத் தூண்​டும் திரைப்​பா​டல்​கள்,​​ திரைப்​ப​டங்​கள்,​​ பத்​தி​ரி​கைப் படங்​கள்,​​ செல்​போன்​க​ளி​லும் ஆபாச விடியோ காட்​சி​கள்,​​ இணை​ய​த​ளங்​க​ளில் போர்​னோ​கி​ராபி,​​ எது​வுமே தவ​றில்லை என்ற மன​நி​லை​யில் இந்​தி​யர்​கள் இருப்​ப​தாக செக்ஸ் சர்வே என எல்​லா​வற்​றை​யும் கிடைக்​கச் செய்​து​விட்டு,​​ பெண்​க​ளுக்​குப் பாது​காப்பை அதி​க​ரிப்​ப​தா​லும்,​​ கடு​மை​யான சட்​டங்​கள் மூல​மும் பாலி​யல் கொடு​மை​க​ளைத் தடுத்​து​விட முடி​யும் எனச் சொல்​வது சரி​யான வாதம் அல்ல.​ மேலை​நா​டு​க​ளில் இவை இல்​லையா?​ என்று கேட்​க​லாம்.​ அந்த வாழ்க்​கை​முறை இந்​தி​யா​வில் எல்லா வீடு​க​ளி​லும் இல்லை.