பதிவுகள்

Friday 13 August 2010

புரிய துவங்கியபோது நரைக்கவும் துவங்கியது!

ரியாலுக்கு வாழ்க்கையை
அடகு வைத்து பாலையில்
பரிதவிக்கும் பாவி! .
கைபேசியில் ௬ க்குரலிடும்
கையாலாகாதவன்!
கண்ணே! மணியே!
என்றெல்லாம் காதலியை
கொஞ்சி மகிழ நேரமில்லை!
இணையம் வழியே
இத்யத்தை பரிமாறிக்கொண்டதால்
இதயம் கூட ஹெகிங் செய்யப்பட்டது
என்னவள் இதயம்
கூட இறுகிப்போனது!
காதல் கூட எனக்கு
கானல் நீராகிப்போனது!
தொலை தூரக்
காதல் செய்து
தொலைந்து போனவன்!
கணிப்பொறிக்குள்
அகப்பட்டுக்கொண்ட கயவன்! .
திரை கடல்லோடி
திரவியம் தேடும்
திசை மாறியப் பறவை!
இதன் முதலீடு
எனது இளமை.!
இழபபீடு கிடைக்கா
இழப்பு இது என்று !
புரிய துவங்கியபோது
நரைக்கவும் துவங்கியது!