பதிவுகள்

Tuesday 20 July 2010

வழிமேல் விழி வைத்து.....

வழிமேல் விழி வைத்து.....
அறைக்குள் நுழைந்தோமோ...
இல்லையோ காலண்டர்களின்
தேதிகள் வெட்டுபட துவங்கும் ..
குளிரூட்டப்பட்ட அறையினில்
தூக்கமற்று நீளும் இரவுகள் ..
அலார அச்சுறத்தலோடு வேண்டா
வெறுப்புடன் விடியும் நாட்கள் ..
சுக துக்க நிகழ்வுகள் துவங்கி
முடிந்துவிடும் தொலைபேசி
அழைப்புகளினூடே ..
ஒற்றையாய் ஆராரோ பாடும்
அவள் அழுகையின் சப்தம்
இங்கே இவன் தூக்கத்தில்
வெடிக்கும் வார்த்தைகள்
வழியும் கண்ணீரை வந்தடைய
எதைசொல்லி ஆறுதல்படுத்த
ஆளாளுக்கு ஒருயோசனையுடன் .
தாராளமாய் ரணங்கள்....
இங்கே ஒவ்வருக்கும்......