பதிவுகள்

Wednesday 21 December 2011

சசிகலா நீக்கம்: பாசிச ஜெயாவை போற்றும் பார்ப்பன ஊடகங்கள் !

கூடங்குளம், பால் பேருந்து கட்டண உயர்வு, முல்லைப் பெரியாறு முதலான மக்களின் உயிராதாரமான பிரச்சினைகளுக்காக தமிழகத்தில் தீவிரமான போராட்டங்கள் வளரும் காலத்தில் சசிகலா நீக்கம் குறித்த செய்தி ஊடகங்களின் மாபெரும் சென்சேஷனாக முன்வைக்கப்படுகிறது.

அ.தி.மு.கவிலிருந்தும் அதன் அடிப்படை உறுப்பினர்கள் தகுதியிலிருந்தும் சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன் உள்ளிட்ட பன்னிரெண்டு உறவினர்கள் அடங்கிய மன்னார்குடி கும்பல் நீக்கப்பட்டது குறித்து பார்ப்பன ஊடகங்கள் மகிழ்வதோடு துள்ளிக் குதிக்கின்றன. தினமலர், தினமணி, தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, எக்ஸ்பிரஸ் முதலான பார்ப்பன பத்திரிகைகளும், சோ, சு.சாமி, பா.ஜ.க முதலான பார்ப்பனக் கும்பல்களும் இதை ஆரவாரத்துடன் ஆதரிப்பதோடு அதற்கு பொருத்தமான கிசுகிசு செய்திகளையும் விரிவாக முன்வைக்கின்றன. இறுதியில் ஜெயாவின் அனைத்து பாவங்களுக்கும் இந்த மன்னார்குடி கும்பல்தான் காரணமென்றும் இனி அவர் எந்த நெருக்கடியுமின்றி ‘நல்லாட்சி’யை தொடருவார் என்றும் மக்களுக்கு மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றன.

எம்.ஜி.ஆரால் திட்டமிட்டு தமிழக அரசியலுக்குள் பாசிச ஜெயா திணிக்கப்பட்ட போதும் பின்னர் அவர் வாரிசு சண்டையில் வெற்றி பெற்ற போதும் பார்ப்பன ஊடகங்கள் அவரை மற்ற திராவிட அரசியல்வாதிகளிலிருந்து வேறுபட்டு இருப்பவர் என்று போற்றிக் கொண்டாடின. நாகரீகமானவர், கான்வென்டு கல்வி கற்றவர், ஊழலற்றவர், குடும்ப பந்தங்கள் இல்லாதவர், படித்தவர், பண்பாளர், தமிழினித்தின் தனித்தன்மையை மறுத்து பாரத ஒற்றுமையை போற்றுபவர், இன வெறி இல்லாதவர், இந்துமத ஆன்மீக விசயங்களை சமரசமின்றி பின்பற்றுபவர் என்பதாக இவை நீண்டன.

திராவிட இயக்கங்களையும், தமிழ்நாட்டையும் எப்போதும் இந்தியாவுக்கு எதிரான சந்தேகப்பட்டியலில் வைத்திருக்கும் இந்திய ஊடகங்கள் அதற்கு மாற்றாக அ.தி.மு.கவையும், ஜெயாவையும் முன்னிருத்தின. பிராமணர் சங்கம், ஜெயேந்திரன், ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னணி போன்ற அவாள் கட்சிகளெல்லாம் ஜெயாவை முன்னுதாரமாண இந்து அரசியல்வாதியாக போற்றி வந்தன.

90களில் ஜெயா ஆட்சியைப் பிடித்ததும் பின்னர் சசிகலா நட்பு உறுதியடைந்ததும், தொடர்ச்சியாக ஜெயா சசிகலா கும்பல் முழு தமிழ்நாட்டையும் தடுப்பார் யாருமின்றி மொட்டையடித்து கொள்ளையடித்ததுமான காலத்தில் இந்த பார்ப்பன ஊடகங்கள் அணுகுமுறை எப்படி இருந்தன?

இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சசிகலாவை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய பார்ப்பன ஊடகங்கள் பாசிச ஜெயாவை மட்டும் அதிலிருந்து நீக்கி சுத்தமானவர் என்று அறிவித்தன. அதாவது சசிகலாவின் மன்னார்குடி கும்பல்தான் 91-96 வரையிலான ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல் நடவடிக்கைகளுக்கு காரணம், ஜெயலலிதா அதை தடுக்க முடியாதபடி கட்டுண்டு கிடந்தார் என்றுதான் அவர்கள் சித்தரித்தார்கள்.

பின்னர் தேர்தலில் படுதோல்வியுற்று புறக்கணிப்ப்பட்ட காலத்தில் இந்த பார்ப்பன கிச்சன் காபினெட் சசிகலாவை மட்டும் குறிவைத்து தனிமைப்படுத்தின. அதற்கு தோதாக அப்போது இதே போல சசிகலாவை நீக்கியதாக ஜெயா அறிவித்தார். பின்னர் சேர்ந்து கொண்டார். 2001இல் ஆட்சிக்கு வந்த போதும் பார்ப்பன ஊடகங்கள் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து ஓதிக்கொண்டே வந்தன. அப்போதும் இதே போன்று நாடகம் நடந்தது. இடையில் பிரிந்து போன ஜெயா பின்னர் சசிகலாவுடன் சேர்ந்து கொண்டார்.

இப்போது 2011இல் ஜெயா ஆட்சியைப் பிடித்த பிறகும் பார்ப்பன ஊடகங்கள் நேர்மையான ஊழலற்ற ஆட்சிக்கு “மன்னார்குடி மாஃபியாவை” நீக்குமாறு விரும்பின. ஒரு வேளை அப்படி முற்றிலும் விலக்காவிட்டாலும் ஆட்சி அதிகார அமைப்புகளிலிருந்து அவர்களை தள்ளி வைக்கமாறு கோரின. துக்ளக் சோ இது குறித்து பலமுறை புலம்பியிருக்கிறார். தற்போது சசிகலா நீக்கத்திற்காக ஜெயாவுக்கு பாராட்டுமழை பொழிந்திருக்கும் சு.சாமி மாமாவும் அப்படித்தான் அடிக்கடி பேசி வந்தார். மன்னார்குடி மாஃபியா என்ற வார்த்தையே சு.சாமி அறிமுகப்படுத்திய ஒன்று.

இப்போது ஆட்சியில் அசுரபல பெரும்பான்மையுடன் இருக்கும் அ.தி.மு.க அரசை மன்னார்குடி கும்பல்தான் கட்டுப்படுத்துகிறது, தலைமை செயலகத்தில் சசிகலாவின் பினாமியான பன்னீர்செல்வம் என்ற அதிகாரிதான் உண்மையான தலைமை செயலாளராக ஆட்சியை, அதிகாரிகளை தீர்மானிக்கிறார், இதனால் பல நல்ல அதிகாரிகள் அதிருப்தி அடைந்து மத்திய அரசு வேலைகளுக்கு மாற்றுமாறு கோரினர், அமைச்சர்கள் – அதிகாரிகள் அனைவரும் சசிகலா கும்பலின் விருப்பத்தின்படியே நடந்து கொண்டனர், இறுதியில் பெங்களூரூ சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்து ஜெயா ஆட்சியை இழந்தால் யாரை கொண்டுவருவது, அதற்கு சசிகலா செய்து வந்த முயற்சிகள் உளவுத்துறை மூலம் ஜெயாவுக்கு வந்து அவர் கோபம் அடைந்தார் முதலான பல செய்திகள் கிசுகிசு பாணியில் பார்ப்பன ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.

இவற்றில் உண்மை இருக்கலாம், இல்லாமலிருக்கலாம். ஆனால் சசிகலாவின் நட்புதான் ஜெயாவின் எல்லா தவறுகளுக்கும் அடிப்படை காரணமென்று பார்ப்பன ஊடகங்கள் சித்தரிக்கும் சதிதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அரசியலாகும்.

இந்த ஆட்சியிலேயே ஜெயா கொண்டு வந்துள்ள தலைமைச் செயலக இட மாற்றம், அண்ணா நூலக இட மாற்றம், சமச்சீர்கல்வியை தடை செய்ய உச்சநீதிமன்றம் வரை சென்றும், பழையை பாடபுத்தகங்களை அச்சிட்டும் செய்த வக்கிர செலவு, மக்கள் நலப் பணியாளர்களை நீக்கியது, ஈழத்தாயாக வேடம் போட்டு பின்னர் மூவர் தூக்கை உறுதி செய்தது, கூடங்குளத்தில் போராடும் மக்களை ஆதரிப்பது போல பின்னர் எதிர்த்தது, பால் விலை, பேருந்து கட்டண உயர்வை அதிரடியாக உயர்த்தியது என்று ஏகப்பட்ட பாசிச தர்பாரை நாம் அன்றாடம் தரிசித்து வருகிறோம்.

இந்த பாசிச தர்பாருக்கும் சசிகலா நட்புக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? என்றால் நிச்சயமாக இல்லை. இவையெல்லாம் பாசிச ஜெயா அவரளவிலேயே தனிப்பட்ட முறையிலேயே செய்த காட்டு தர்பார் நடவடிக்கைகள். இப்போது விடுங்கள், முந்தைய ஆட்சியில் கரசேவைக்கு ஆளனுப்பியது, மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்து சிறுபான்மை மக்களை அச்சுறுத்தியது, ஆடு கோழி பலி தடைச்சட்டம் கொண்டு வந்து சூத்திர-பஞ்சம மக்களை பார்ப்பனியமயமாக்க முயன்றது, ஈழம் என்று பேசுபவரை தடா,பொடாவில் உள்ளே தள்ளி கொடுமைப்படுத்தியது, ஆர்.எஸ்.எஸ் போற்றும் நடவடிக்கைகளை மனங்குளிரச் செய்தது, சாலைப்பணியாளர் நீக்கம், ஒரிரவில் இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களை பதவி நீக்கம் செய்தது முதலான நடவடிக்கைகள் காட்டுவது என்ன?

இவையெல்லாம் ஜெயலலிதாவை ஒரு பார்ப்பன பாசிஸ்ட் என்பதுடன் இவையனைத்தம் அவரது முழு விருப்பத்திலிருந்து மட்டுமே பிறந்திருக்கிறது என்பதையம் நாம் புரிந்து கொள்ளலாம். எனில் சசிகலாவின் நட்புக்கு எந்த பங்குமில்லையா என்றால் அப்படி இல்லை.

இதில் ஜெயாவையும் சசிகலாவையும் பிரித்து பார்த்து புரிந்து கொள்வது சரியல்ல. ஏனெனில் அ.தி.மு.க என்றொரு ஓட்டுப் பொறுக்கி கட்சி, அழகிரி ஃபார்முலாவுக்கு முன்னரேயே கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் அதே ஃபார்முலாவை கண்டுபிடித்து அறிமுகம் செய்த கட்சி, மாவட்ட அளவிலும் உள்ளூர் அளவிலும் சாராய ரவுடிகள், மணல் மாஃபியாக்கள், மதுக்கடை உரிமையாளர்கள், சுயநிதிக் கல்லூரி முதலாளிகள், ரியல் எஸ்டேட்டில் கோடிகளைக் குவிப்பவர்கள் கொண்ட கட்சியை தொடர்ந்து நடத்தவும், காசை வீசி தமது அரசியல் நடவடிக்கைகளை செய்து கொள்ளவும் ஊழல் என்பது அ.தி.மு.கவிற்கு அத்தியாவசியமான ஒன்று.

ஊழல் என்றொரு வஸ்து இல்லாமல் அ.தி.மு.கவோ இல்லை கான்வென்டு சீமாட்டி ஜெயாவோ இல்லை. முந்தைய ஆட்சிக் காலத்தில் ஜெயா-சசி கும்பல் மட்டும் கொள்ளையடிக்கவில்லை, அவர்களது உள்ளூர் தளபதிகள் அனைவரும் மும்முரமாக கொள்ளையடித்தார்கள். அந்தக் கொள்ளையும் அந்தக் கொள்ளையின் விளைவாக உருவான ஒரு ஒட்டுண்ணிக் கும்பலும்தான் அ.தி.மு.கவின் அஸ்திவாரம்.

90களில் இந்தக் கொள்ளை பாரம்பரிய முறைகளில் நேரடிப் பணம், நேரடி சொத்து குவிப்பு, என்று நடந்த போது ஏற்பட்ட பிரச்சினைகள் இப்போது இல்லை. ஊழல் என்பது ஒரு சூட்கேசில் வைத்து கொடுக்க்கப்படும் பணமாக நடப்பில் இல்லை. அது ஸ்விஸ் வங்கி போன்று தேசங்கடந்தும் ரியல் எஸ்டேட், சுயநிதிக் கல்லூரிகள், சாராய ஆலைகள் என்று சட்டபூர்வமாகவும் மாறிவிட்ட பிறகு பழைய பாணியில் சொத்து சேர்த்து பிடிபடும் நிலைமையில் ஜெயலலிதா இன்று இல்லை.

எனவே ஜெயா சசிகலாவின் நட்பு என்பது உறவுப்பூர்வமாக இருக்கிறது என்பதை விட தொழில் பூர்வமாக, அதிகார பங்கு பூர்வமாக பிணைக்கப்பட்டிருப்பது என்பதுதான் உண்மை. இதில் அவர்களது தனிப்பட்ட உறவு என்பது இத்தகைய மாபெரும் அதிகார சாம்ராஜ்ஜியத்தின் மேல்தான் நடமாடுகிறது என்பது முக்கியம். எனவே இங்கு சசிகலா போய்விட்டார் என்றால் அந்த ஊழல் சாம்ராஜ்ஜியத்தில் ஏதோ பங்கு பிரிக்கும் சண்டை நடக்கிறது என்றுதான் பொருளே தவிர மாறாக அங்கு ஊழலே பிரிந்து போய்விட்டது என்பது பாமரத்தனம்.

மேலும் அரசு, சாராய ஆலைகள், தொலைக்காட்சி தொழில் என்று ஏகப்பட்ட முறையில் பிணைக்கப்பட்டிருக்கும் ஜெயா சசிகலா நட்பு என்பது அப்படி ஒரு குழயாடிச் சண்டையால் பிரிந்து போகும் ஒன்றல்ல. அதனால்தான் இதற்கு முன்னர் அவர்கள் அப்படி பிரிந்திருந்தாலும் கூடிய சீக்கிரத்தில் ஒன்று சேர்ந்தார்கள். இந்த ஒன்றுகூடலை சாதித்தது மேற்படி பிரிக்க முடியாதபடி இருக்கும் ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் நலனை அப்படி கைவிட்டு விட முடியாதபடி இருக்கும் நிர்ப்பந்தம்தான்.

இப்போது சசிகலா நீக்கப்பட்டாலும் விரைவில் அவர் சேர்க்கப்படலாம். ஒருவேளை அப்படி சேராமல் இருக்கும் பட்சத்தில் சொத்து வாரிசுரிமைச் சண்டை நடக்கும். அப்படி ஒரு சண்டை நடக்கும் பட்சத்தில் இருவருக்கும் அது பாதகம் என்பதால் தோழிகள் மீண்டும் இணையவே வாய்ப்பிருக்கிறது. மேலும் பெங்களூருவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயா தண்டிக்கப்பட்டாலும் அவரது பினாமி மூலம் ஆட்சி தொடரும் என்பதோடு தொடர்ந்து அதிகார மையமாக அவரே இருப்பார். அதில் ஏதாவது செய்து ஜெயாவை நீக்கிவிட்டு அ.தி.மு.கவை கைப்பற்றலாம் என்றால் அதற்கு தேவைப்படும் நட்சத்திர முகம் கொண்ட தலைமைக்கு பொருத்தமாக சசிகலா கும்பலிடம் யாருமில்லை. இப்படியாக ஜெயா சசிகலா நட்பு என்பது யாரும் பிரிக்க முடியாதபடி சேர்ந்திருக்கிறது.

அடுத்து ஜெயாவின் விருப்பத்திற்கு மாறாக சசிகலா மட்டும்தான் ஆட்சியை நடத்தினார், ஊழல் செய்தார் என்பது பச்சையான பொய். இருவரும் அதை மனமொப்பி சேர்ந்துதான் செய்திருக்கிறார்கள், செய்கிறார்கள், செய்வார்கள். அதிலும் குறிப்பாக இதில் முடிவு செய்யும் உரிமை பாசிச ஜெயாவிடமே இருக்கிறது. அதற்கு ஆதாரமாகத்தான் இந்த ஆட்சியிலும், இதற்கு முன்னரும் அவர் மேற்கண்ட பாசிச நடவடிக்கைகளை பட்டியல் இட்டோம். இவையெல்லாம் ஜெயா என்றொரு தனிநபர் குறிப்பிட்ட வர்க்க, சாதி, மத பிரிவினரின் நலனுக்காக எடுத்த பாசிச நடவடிக்கைக
...

Monday 12 December 2011

ஆட்டம் போடும் அணு அரசியல்!

ஜெர்மனி அணு உலைகளை மூடுவதாக அறிவித்திருப்பதற்குக் காரணம், அந்நாட்டின் கூட்டணி அரசியல்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் ஜெர்மனி அதன் அணு உலைகளை மூடிவருகிறது எனச் சொல்லி வருகிறார்கள். ஜெர்மனியில் இருந்த 19 அணுமின் நிலையங்களில் காலாவதியான 2 நிலையங்கள் மட்டுமே மூடப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 17 உலைகளை இன்னும் 12 ஆண்டுகள் நடத்த ஒப்புக்கொண்டிருப்பதாக ஜெர்மன் அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகமும், அந்நாட்டின் பொருளாதார அமைச்சர் ரெய்னரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி அறிவித்தனர்.

ஜெர்மனியைப் போலவே சுவீடனும் அணுமின் நிலையங்களை மூடப் போவதாக அறிவித்திருந்தது. ஆனால், 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி பழுதடைந்த உலைகளுக்குப் பதிலாக புதிய உலைகளை நிறுவிக்கொள்ள சுவீடன் அரசு அனுமதி அளித்ததன் மூலம் அணுமின் நிலையங்களுக்கு எதிரான சுவீடனின் கொள்கை முடிவுக்கு வந்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.

சுவீடன் அரசும், ஜெர்மனியைப்போல் இல்லாமல், ‘நிதானமாக’ முடிவெடுக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறது. அணு மின் நிலையங்களை மூடுவதாக ஜெர்மனி அறிவித்தது ஏன்? அதற்குப்பின் இருப்பது ஜெர்மனியின் அரசியல்.

இந்தியாவைப்போல பல கட்சிகள் கொண்ட நாடு ஜெர்மனி. அவற்றுள் முக்கியமானவை இரண்டு. ஒன்று, கிறிஸ்டியன் டெமாக்ரெட்டிக் யூனியன் (CDU), மற்றது, சோஷியல் டெமாக்ரெட்டிக் பார்ட்டி. (SDP). இவற்றைத் தவிர , ஃபிரீ டெமாக்ரெட்டிக் பார்ட்டி (FDP), இடதுசாரிகள்,கிரீன் பார்ட்டி என வேறு சில சிறிய கட்சிகளும் இருக்கின்றன. கிரீன் சுற்றுச்சூழலை மையமாகக்கொண்டு செயல்படும் கட்சி.

பல ஆண்டுகளாக ஜெர்மனியில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏதாவது ஒரு பெரிய கட்சி மற்றொரு சிறிய கட்சியோடு சேர்ந்து அரசமைப்பதே வழக்கமாக இருந்து வருகிறது. இப்போது CDU, சிறிய கட்சியான FDPயோடு சேர்ந்து ஆட்சியில் இருக்கிறது

1998லிருந்து 2005 வரை இரண்டு முறை கிரீன் பார்ட்டி பெரிய கட்சியான SDPயுடன் சேர்ந்து ஆட்சியில் இருந்தது. அப்போது அந்தக் கட்சியைச் சேர்ந்தவர் துணைப் பிரதமராகவும் வெளியுறவு அமைச்சராகவும்இருந்தார். ஜெர்மன் சட்டங்களின்படி ஒரு கட்சி நாடாளுமன்றத்தில் இடம் பெற வேண்டுமானால், குறைந்தபட்சம் 5 சதவீத வாக்குகள் வாங்க வேண்டும். கிரீன் பார்ட்டி அந்தத் தேர்தலில் 6 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக வாங்கியிருந்தது.

விரைவிலேயே சிவப்பு - பச்சைக் கூட்டணியில் (ஜெர்மனியில் கூட்டணிகளை அந்தந்தக் கட்சிக் கொடிகளின் வண்ணங்களை வைத்தே குறிப்பிடுகின்றனர். SDPயின் நிறம் சிவப்பு; CDUயின் நிறம் கறுப்பு; FDPயின் நிறம் மஞ்சள்) பிரச்சினை முளைத்தது. யுகோஸ்லேவியாவிலிருந்து செர்பியா, கொசாவா பிரிந்தபோது கொசாவா நாட்டிற்கு ஜெர்மன் அரசு படைகளை அனுப்பியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிரீன் கட்சியிலிருந்து பலர் விலகினார்கள். கட்சி, அடுத்து நடந்த மாநிலத் தேர்தலில் தோல்விகளைச் சந்தித்தது.

அப்போதுதான் கிரீன் கட்சி, அணுமின் நிலையங்கள் விஷயத்தைக் கையில் எடுத்தது. SDPக்கு தர்மசங்கடமாகப் போனது. ஏனெனில், அதன் உறுப்பினர்களில் பலர் அதை ஏற்கவில்லை. ஆனால், அரசைக் காப்பாற்றிக்கொள்ள மெல்ல மெல்ல, அதாவது 2010க்குப் பின், அணு உலைகளை மூடுவதற்கு ஒப்புக் கொண்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த, இப்போது ஆளும் கட்சியாக உள்ள CDUவும் அன்று அணு உலைகளை மூடுவதை எதிர்த்தது.

இந்த ஆண்டு மார்ச் இறுதியில் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில், கிரீன் பார்ட்டி கணிசமான வெற்தீவூளப் பெற்றது. ஒரு வளம் மிகுந்த மாநிலத்தில், அறுபது ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்த CDUயை (அதுதான் இப்போது மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் கட்சி) வீழ்த்தி, ஆட்சியைக்கைப்பற்றியது. கட்சி துவங்கி, 30 ஆண்டுகளில் இப்போதுதான் அது முதல் முறையாக ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கிறது.

CDUவின் தோல்விக்கு ஒரு முக்கியக் காரணம், வாகனங்களில் பெட்ரோலோடு 10 சதவீதம் ஆல்கஹாலையும் கலந்து பயன்படுத்த வேண்டும் என சில மாதங்களுக்கு முன், அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டது. இதன் காரணமாக விளைநிலங்களில் தானியங்களுக்குப் பதில், பயோ ஃபூயலுக்கு உதவும் பயிர்களை மக்கள் பயிரிட ஆரம்பித்து விடுவார்கள் என எதிர்ப்பு எழுந்தது. அதனால், அது போன்ற நிலங்களுக்கு வரியை உயர்த்தியது அரசு. சுற்றுச்சூழல் ஆதரவாளர்கள் இதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

கீரின் பார்ட்டியின் வெற்றியைக் கண்டு உஷாரான CDU, அவர்களது கோரிக்கையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தது. அதாவது, முன்னால் அணு உலைகளை மூட எதிர்ப்புத் தெரிவித்த CDU, இன்று அணு உலைகளை 2022க்குள் படிப்படியாக மூடப் போவதாக அறிவித்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ஜெர்மனி எடுத்துள்ள முடிவுக்குப் பின்னால் இருப்பது, சுற்றுச்சூழல் அல்ல, பாதுகாப்பு அல்ல, கூட்டணி அரசியல்.

ஆனால், அந்த முடிவுக்கு எதிரான முணுமுணுப்புகள் கிளம்பியிருக்கின்றன. அணுமின் உலைகளை மூடிவிட்டு காற்றலைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க வேண்டுமானால், ஜெர்மனியின் வடக்குப் பகுதியில் கடலோரமாகக் காற்றாலைகளை அமைக்க வேண்டும். இப்போதுள்ள அணுமின் நிலையங்கள் ஜெர்மனியின் தொழில் நகரங்களான மியூனிக், ஸ்ட்ரட்கார்ட் ஆகியவற்றுக்கு அருகில் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளன. எனவே, வடக்குப் பகுதியிலிருந்து உயர் வோல்ட்டேஜ் கேபிள்கள் அமைத்து, மின்கோபுரங்கள் நிறுவி, மின்சாரத்தைஎடுத்துச் செல்ல வேண்டும். அப்படி கேபிள்கள் அமைப்பதற்கும், மின்கோபுரங்கள் நிறுவுவதற்கும் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே உள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்துகிறார்கள். அதனால், என்ன செய்வது என்று தெரியாமல் அரசு முழிக்கிறது.

வேறு ஒரு பிரச்சினையும் எழுந்துள்ளது. மின்சாரத்தை வீணடிக்காத வகையில் கட்டிடங்களை அமைப்பதன் மூலம், 10 சதவீதம் மின் பயன்பாட்டைக் குறைக்கலாம் என அரசு சொல்கிறது. அதெல்லாம் பேசுவது சுலபம், ஆனால், வேலைக்காகாத காரியம் என சிலர் சொல்கிறார்கள். இது, கடைசியில் நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதில்தான் போய் முடியும். கரியைப் பயன்படுத்துவதை அதிகரித்தால், அது வளி மண்டலத்தில் மாசை அதிகரிக்கும், அதனால், பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

அரசில் இருப்பவர்கள்வேறு விதமான கவலைகளை எழுப்புகிறார்கள். அணுமின் நிலையங்களை ஜெர்மனி மட்டும்தான் மூடுகிறது. அண்டை நாடான பிரான்ஸ் மூடவில்லை. இன்னொரு அண்டை நாடான போலந்து மேலும் இரண்டு உலைகளைத் திறந்திருக்கிறது. எனவே, இனி வரும் நாள்களில் ஜெர்மனி, பிரான்சிடமிருந்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்படும் (ஏற்கெனவே தேவை உச்சத்திற்குப் போன நாட்களில் அது அவ்வாறு வாங்கியிருக்கிறது). நாட்டின் பொருளாதாரம் அயல் நாட்டைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுவிடும் என்பது அவர்களது கவலை.

முழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் தவிக்கிறது ஜெர்மனி.

Saturday 10 December 2011

கனிகிற வேகத்தில் வெம்பி விட்டீர்களே!



சென்னை விமான நிலையம்














சிஐடி காலனி






கனிமொழியை பார்க்க வந்த   திமுக 
முன்னணி தலைவர்கள்  









பகுத்தறிவுப் பகலவன் வீட்டில் உடைக்கப் பட்ட திருஷ்டி பூசணிக்காய்


ஆரத்தி

ஜெகதரட்சகன் வந்த 2 கோடி ரூபாய் போர்ஷ் கார்

கனிமொழியை புகைப்படமெடுக்க போட்டி போடும் பத்திரிக்கையாளர்கள்

ஒரே நாளில் ஸ்டாலினை விட "பெரிய" தலைவரான கனிமொழி



முடியலடா ..... !!!!!


width=/divquot;,MsoNormal

Tuesday 29 November 2011

கனிமொழிக்கு ஓர் கடிதம் !

தமிழக முதல்வர் அவர்களுக்கு மொக்கையனின் மனம் திறந்த மடல்!

தமிழக முதல்வர் அவர்களுக்கு,

தமிழகத்தில் உள்ள இரு பெரிய கட்சிகளுக்கும் நிர்வாகம் செய்யத் தெரியவில்லை என்பதைக் கடந்த ஆட்சியில் கருணாநிதி நிரூபணம் செய்த பிறகு ஆட்சியைக் கைப்பற்றிய ஆறே மாதத்தில் நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற நீங்கள் பேருந்து கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியதுடன் பால் விலையையும் லிட்டருக்கு ரூ 6.25 உயர்த்தியுள்ளீர்கள். இது போதாதென்று மின்சாரக் கட்டணத்தையும் உயர்த்தி தமிழக மக்களின் வயிற்றில் பாலை வார்க்கப் போகிறீர்கள்.

இதற்க்கெல்லாம் நீங்கள் சொல்லும் காரணம், தமிழக பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன என்பதுவே. கடந்த ஐந்து வருடமாக தமிழகத்தை ஆண்ட கருணாநிதியே, "பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கக் காரணம், தமிழக மின்சார வாரியம் சுமார் 45000 கோடி அளவுக்குக் கடனில் தத்தளிக்கிறது. நான் உட்பட தமிழக பாமர மக்களின் சந்தேகம், கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் தானா பொதுத் துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன.?" என்று கேட்டுள்ளார். அவர் கேட்பதில் நியாயம் இருக்கிறது. கருணாநிதிக்கு முன்னர் நீங்கள் ஆட்சி செய்த காலத்தில் இவையெல்லாம் லாபத்தில் இயங்கி வந்தனவா?

பேருந்துக் கட்டண உயர்வால் தமிழக மக்கள் படும் இன்னல்கள் உங்கள் பார்வைக்கு வந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஊருக்குச் சென்று விட்டு சொந்த ஊர் திரும்ப கையில் பேருந்துக் கட்டணத்துக்கான முழுத் தொகையும் இல்லாமல் போக வேண்டிய இடத்துக்கு முன்னரே இறங்கி நடந்து சென்றதாகவும், பேருந்தில் ஏறிய சிலர் கண்டக்டர் சொன்ன டிக்கெட் ரேட்டைக் கேட்டு மாரடைப்பு வராத குறையாக இறங்கிய செய்திகளும் உங்கள் பார்வைக்கு வந்தனவா என்று தெரியவில்லை.

இலவச லேப்டாப் திட்டத்துக்கு மத்திய அரசு நிதி தராததாலேயே கட்டண உயர்வு என்று அறிக்கை விடும் முதல்வர் அவர்களே, மத்திய அரசு நிதியை நம்பித்தானா இலவசத் திட்டங்களை அறிவித்தீர்கள்?. இல்லை, இலவச திட்டங்களை அறிவிக்கும் முன்னர் மத்திய அரசைக் கேட்டு அவர்களின் உறுதிமொழிகளைப் பெற்ற பின்னர் அறிவித்தீர்களா?. உங்களிடம் யார் கேட்டது இலவசம்?. பேருந்துக் கட்டணம், மின்சாரக் கட்டணம், பால் விலைகளை உயர்த்தாமல் இருந்தால் நீங்கள் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை தரும் இலவசத்தை நாங்களே வாங்கிக் கொள்வோமே. உங்கள் அமைச்சர் பெருமக்களுக்குக் கிடைக்கும் கமிசனைப் பெறவா இது போன்றதொரு இலவச யுத்தி?.

20 கிலோ அரிசி இலவசமாக வழங்குவதாலும் அரசு கேபிளை ரூ 70 விலையில் ஒளிபரப்புவதாலும் தமிழக மக்களின் மனங்கள் மகிழ்ந்து விடப் போவதில்லை. பேருந்துக் கட்டணம் என்ற பெயரில் தினம் பெறும் கூலியில் பாதியையும் மின்சாரக் கட்டணம் என்ற பெயரில் மீதியையும் வாங்காமல் இருந்தாலே போதும்.

நஷ்டத்தை ஈடுகட்ட அதிகாரிகளுக்குத் தெரிந்த ஒரே வழி விலையை உயர்த்துவது தான். இவர்கள் எல்லாம் எப்படி இந்திய ஆட்சிப் பணி முடித்து வந்தார்கள் என்பது தெரிய வில்லை. தமிழக பொதுத் துறை நிறுவனங்களில் சிக்கன நடவடிக்கை மேற்கொண்டு முடியும் வரை நஷ்டத்தைச் சமாளித்து விட்டு கடைசி முயற்சியாக 15 முதல் 25 சதவீதம் வரை கட்டணங்களை உயர்த்தி இருக்கலாம். ஒரேயடியாக பேருந்துக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி விட்டீர்கள். சரி தான். ஐந்து வருடங்கள் கடந்து மீண்டும் ஆட்சிக்கு வருவது சந்தேகம் என்ற நிலையில் 10 வருடத்துக்கும் சேர்த்து ஏற்றி விடுங்கள் என்றுகூட உங்கள் ஆலோசனைக் குழு உங்களுக்கு ஆலோசனைகள் வழங்கி இருக்கக் கூடும்.

ஒரு நாளாவது சென்னை மாநகரப் பேருந்துகளில் நீங்களும் உங்கள் அமைச்சர் பெருமக்களும் போயஸ் கார்டனில் இருந்து கோட்டைக்குப் பயணம் செய்து பாருங்கள். தமிழக பேருந்துகளின் அவல நிலை உங்களுக்குத் தெரிய வரும். கேரள மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப் படும் ஏழை முதல்வர்கள் போன்று தமிழ்நாட்டில் ஏழைகள் யாரும் முதல்வராகத் தேர்வு செய்யப் படாததே எங்களின் அவல நிலைக்குக் காரணம்.

அடுத்து தமிழக குடிமகன்களின் துயர் துடைக்க உங்கள் ஆட்சியில் எலைட் பார்களைத் திறக்க உள்ளதாக செய்திகள் மூலம் அறிந்தேன். வெளிநாட்டு மதுவகைகள் பரிமாறப் படும் எலைட் பாருக்குள் நுழையவே ரூ 50 கட்டணமாமே. மகத்தான திட்டத்தைக் கொண்டு வர உள்ள தமிழக முதல்வரே வரலாற்றில் உங்கள் பெயர் நிச்சயமாக இடம்பெறும்.

தினக் கூலி பெறுவோரில் பாதிபேர் இப்போது டாஸ்மாக் வாசலில்தான் தவம் இருக்கிறார்கள். இனி எலைட் திட்டமும் வந்து விட்டால் உள்ளூர் சரக்கு அடித்து போரடித்து விட்டது என்று வீட்டில் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மனைவி ஒன்று இரண்டு என சேர்த்து வைக்கும் பணத்தை லவட்டிக் கொண்டு போய் எலைட் பாரில் போய் வெளிநாட்டு சரக்கு அடிக்கும் வாய்ப்பைத் தமிழ்க் குடிமகன்களுக்கு ஏற்படுத்தி தர உள்ளீர்கள் என்பதையும் கொஞ்சம் நினைவில் கொள்ளுங்கள்.

பல்வேறு நலத் திட்டங்களை உங்கள் பொற்கரங்களால் தொடங்கி வைக்கும் தமிழக முதல்வர் அவர்களே, வரலாற்றுத் திட்டமாம் எலைட் பார் திட்டத்தையும் உங்கள் பொற் கரங்களால் தொடங்கி வைத்து தமிழ்க் குடிமகன்களின் வயிற்றில் வெளிநாட்டு மதுவை வார்ப்பீர்கள் என உறுதியாக நம்புகிறோம்.

வாழ்க அண்ணா நாமம்; வளர்க எம்.ஜி.ஆர் புகழ்; எக்கேடுகெட்டோ ஒழியட்டும் தமிழக மக்கள்!

- மொக்கையன்

Monday 28 November 2011

கனிமொழிக்கு ஓர் கடிதம் !


இலக்கிய வீதியில் உலா வர வேண்டிய நீங்கள், திகார் சிறைக்கும் பாட்டியாலா கோர்ட்டுக்கும் இடையே இருக்கும் வீதிகளில் திரிந்துக் கொண்டிருப்பது தான் கொடிய விதி. அதிலே முடங்கிப் போகமாட்டீர்கள் என்பது தெரியும்.

இங்கே இருந்து புதிய பாதையை தேர்வு செய்யப்போகிறீர்களா. அல்லது பழைய பாதையில் பயணிக்கப் போகிறீர்களா என்பதுதான் இக்கடிதத்தின் நோக்கம்.

இளவரசன் சித்தார்த்தன் போதி மரத்தின் கீழே ஞானம் பெற்றான் புத்தன் ஆனான் ! ஆனால் ஊழல் புகாருக்கு அவன் ஆளாகவில்லை. எந்தவித சொர்க்கபுரிகளும் இல்லாத காலத்திலேயே, அரச வாழ்க்கையை துறந்தவன் அந்த இளவரசன்.

நீங்களும் கலைஞரின் ராசாத்தி (ராணி என்று தானே அர்த்தம்) பெற்றதால் இளவரசிதான். திகார் சிறையில் இருந்ததால் ஞானம் பெற்றீர்களா? எதிர்காலம் தான் அதை சொல்லும்.

தயாளு குடும்பத்தின் வாரிசுகளை என் இலக்கிய வாரிசு என்று சொன்னாரா கலைஞர்? அரசியல் வேண்டாம் என்பதுதானே அதன் அர்த்தம்? பக்கம் பக்கமாக எழுதி இலக்கியத்தை படைக்க வேண்டிய உங்களை பார்த்து பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதி குவிக்கின்றதே?

பத்திரிகையாளர், பெண்ணியவாதி, இலக்கியவாதி, அடிப்படை உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர் என்ற குடையின் கீழ் நீங்கள் இருந்த காலத்தை எண்ணிப் பாருங்கள்.

எத்திராஜ் கல்லூரியில் படித்ததும், 1989ம் ஆண்டு மிக விமரிசையான திருமண வாழ்க்கை. அதிலே கசப்பு ஏற்பட்டதும் விலகி இருந்தீர்கள். கவிதை புனைய முற்பட்டீர்கள். மெல்ல பத்திரிகையாளர் ஆக வேண்டும் என்றதும், தன் பரம எதிரியாக கருதும், ‘தி இந்துபத்திரிகையில் உங்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்தார் உங்களது தந்தை.

எளிமையின் வடிவாகவே, உங்களை பத்திரிகையாளர்கள் பார்த்தார்கள். பந்தா இல்லாத உங்கள் நட்பில் அன்று இருந்தவர்கள், ‘நீங்கள் பெரிய பத்திரிகையாளராக வரவேண்டும். உங்கள் அப்பாவையே திணறடிக்கும் கேள்விகளை கேட்டு பேட்டி எடுக்க வேண்டும்என்று சொன்னது ஞாபகமிருக்கும் என்றே கருதுகிறேன்.

இதற்குள் தி.மு.க. 1996ம் ஆண்டு ஆட்சிக்கு வந்துவிடுகிறது. முதல்வரின் மகளாக இருந்துக் கொண்டு, தமிழ்நாட்டில் அதுவும் தி இந்துபத்திரிகையில் வேலைக்கு போக வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. அந்த நேரத்தில், நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டில் முன்னிலை பெற்றுவிடக்கூடாது (அப்பவேவா) என்று கோபாலபுரத்தில் பேசிக் கொண்டதாக தகவல்.

உடனே, சிங்கப்பூரில் இருக்கும் தமிழ் முரசுபத்திரிகையில் வேலை பார்க்கும்படி அப்பா சொன்னதன் பேரில் செல்கிறீர்கள். அங்கே தான் அரவிந்தனை பார்க்கிறீர்கள். காதல்திருமணம் என்ற வாழ்க்கை மீண்டும் தொடங்குகிறது.

உங்கள் தேவைகளை ஸ்டெர்லிங் சிவசங்கரன் பார்த்துக் கொள்வதாக முரசொலி மாறன் மூலமாக தந்தைக்கு தகவல் வருகிறது. உங்கள் தந்தையாரும் ஒரு முறை சிங்கப்பூர் சென்று (1998ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாடத்தில்) ஒரு வாரம் தங்கி இருந்தார்.

ஆக, இதுவரை உங்களை தந்தை என்ற முறையில் ஒதுக்கி வைத்திருந்தாரா என்பதுதான் முக்கியமான கேள்வி?

அரசியலில், ஏன் சமூகத்தில் இரண்டாம் திருமணம் செய்துக் கொள்ளும் ஆண்களின் இரண்டாவது மனைவியும் முன்னுக்கு வரமாட்டார். இரண்டாவது மனைவியின் வாரிசும் முன்னே வராது. அதாவது, ஒரு வித தயக்கத்துடன், ஒரு வித எச்சரிக்கை உணர்வுடனே வாழ வேண்டிய நிர்ப்பந்தம்.

ஆனால், அப்படியொரு குறையை கலைஞர் வைக்கவேயில்லை. காலையில் இங்கே பிற்பகலில் அங்கே. மாலையில் இங்கே இரவில் அங்கே என்று உணவு பழக்கத்தையும் உறங்கும் பழக்கத்தையும் கலைஞர் யாருக்காக மாற்றிக் கொண்டார். கனிமொழி என்ற மகள் இருப்பதால் தானே.

செல்வத்தில், குடும்ப அந்தஸ்தில் எந்த குறையும் வைக்காத அளவுக்கு உங்களையும் உங்கள் தாயாரையும் பார்த்துக் கொண்ட, கலைஞரை நீங்கள் எப்படி பார்த்து கொண்டிருக்க வேண்டும். அதுவும் இந்த தள்ளாத வயதில், அவரை தள்ளிக் கொண்டு சென்னைக்கும் டெல்லிக்கும் அலைய வைத்தது எது?

ஒரு சின்ன பிளாஷ் பேக்!

2003ம் ஆண்டு வாக்கில் முரசொலி மாறன் இறந்ததும், யாருக்கு அந்த இடம். யாரை நிறுத்துவது அந்த இடத்தில் ? என்ற விவாதம் சி.ஐ.டி. காலனியில் எழுந்த நேரம். அந்த காலகட்டத்தில் தான் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு குடிபெயருகிறீர்கள்.

முரசொலி மாறன் இடத்தை நிரப்ப வேண்டியவர்கள் யார் என்று விவாதத்தில், ‘அவர்கள் மகன்களில் யாராவது ஒருவர்என்று குரல் கொடுத்து, ’அத்தைக்கு நன்றிஎன்று புளங்காகிதம் அடைந்தவர்கள் தான் கலாநிதியும் தயாநிதியும்.

அங்கேயும் உங்களுக்கு அரசியல் ஆசை வரவில்லை என்பதற்காகத்தான் இந்த பழசை ஞாபகப்படுத்துகிறேன். 2004 ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிகிறது. தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் ஆகிறார்.

இங்கே பிளாஷ் பேக் முடிகிறது.

தயாநிதி மாறனுக்கு கிடைக்கும் செல்வாக்கை உங்கள் தாயார் பார்க்கிறார். தனது மகளுக்கு எதிர்காலத்தில் பாதுகாப்பான இடம் வேண்டும். தனக்குப் பிறகு, தலைவர் கலைஞருக்கு பிறகு, கனிமொழியின் எதிர்காலம்? என்ற கணக்கு போடுகிறார்.

தினந்தோறும், கனிமொழியை அரசியலுக்கு கொண்டு வாருங்கள் என்று உங்கள் தாயார் நச்சரிக்க, கலைஞரே எத்தனையோ முறை சீனியர்களிடம் புலம்பினார்.

அரசியல் விதை உங்களுக்கும் ஆரம்பித்தது. சென்னை சங்கமம்என்ற பெயரில் ஏதேதோ செய்யத்தொடங்கி, வேலை வாய்ப்பு முகாம் என்ற பெயரில் வலம் வந்து, அரசியலில் குதித்தேவிட்டீர்கள்.

அரசியல் வாழ்க்கை என்று விதையை தூவியவர் உங்கள் தாயாராக இருந்தாலும், உங்களுக்கும் ஆசை அதிகமாகவே இருந்தது.

தனக்குப் பிறகு பாதுகாப்பான இடம் என்று தாயார் சொன்ன இடம், திகார் சிறையா?

இதற்குதானா ஆசைப்பட்டீர்கள் கனிமொழி?

நீங்கள் சிறை சென்ற பிறகு கூடா நட்புஎன்று கலைஞர் அளித்த பேட்டி மற்றவர்களுக்கு புரிந்ததோ இல்லையோ. உங்களுக்கு புரிந்திருக்குமே?

ஆ.ராசா, பூங்கோதை ஆலடி அருணா, ஜாபர் சேட், ஜெகத் கஸ்பர், நீரா ராடியா, சுப்ரியா சுலே, ஆசிப் பல்வா ஆகியோருடன் இருந்த நட்பு கூடா நட்பா? அல்லது கூட வேண்டிய நட்பா என்று யோசிக்கும் வேளை வந்துவிட்டது.

இந்த நட்புகளை தூக்கி எறிவதும் தூக்கிப் பிடிப்பதும் உங்கள் முடிவு. ஆனால், யார் நல்லவர்கள்- யார் கெட்டவர்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க ஐந்தரை மாதங்கள் என்ற நீண்ட காலம் கிடைத்திருக்கிறது. தனிமையில் உங்கள் தவறுகளை நீங்களே பட்டியல் போட்டு, அதில் யாரெல்லாம் தொடர்புடன் இருந்தார்கள் என்று நினைத்து நினைத்துப் பார்த்திருப்பீர்களே?

ஆக, நட்பு பாராட்ட வேண்டியவர்கள் யார்? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

அடுத்து, அரசியலில் இனியும் இருக்க வேண்டுமா என்பது இரண்டாவது எடுக்க வேண்டிய முடிவு.

இத்தனை தூரம் கடந்துவந்துவிட்டு, அரசியலை துறவரம் செய்துவிட முடியுமா என்று கேட்டால், சிரித்துவிடுவீர்கள்.

அரசியலை துறவரம் செய்ய வேண்டும் என்று செய்யவில்லை. புதிய பாதையாக அது இருந்தால், உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது?

கலைஞருக்கு 2016ம் ஆண்டு 93 வயது.

அழகிரிக்கு 2016ம் ஆண்டு 67 வயது.

உங்களுக்கு 2016ம் ஆண்டு 47 வயது.

அட 2021ம் ஆண்டு தேர்தலில் கூட 52 வயது தான்.

உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது?

ஸ்தீரி லோலன் என்ற பெயர் எடுத்த அருணகிரிநாதர் தான் திருவாசகத்தையும் தேவாரத்தையும் பாடியவர்.

வழிப்பறி கொள்ளையன் என்று பெயர் எடுத்த வால்மீகி எழுதியது தான் ராமாயணம்.

இதையெல்லாம் குத்திக் காட்டி, உங்கள் கோபத்தை தூண்டுவதாக நினைக்க வேண்டாம்.

தமிழ்நாடு அல்ல இந்திய அரசியலில் சமூகத்துக்காக, பொதுமக்களுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும் என்று ஆசைப்படும் நேரத்தில், ஒரு தகவல் வந்து சேருகிறது.

டெல்லியிலிருந்து வந்து சேரும் முன்பே, ‘எனக்கொரு பதவிவேண்டும் என்று நீங்களும் உங்கள் தாயாரும் நெருக்கடி கொடுப்பதாக அத்தகவல் சொல்கிறது.

ஆக, அர்ப்பணிப்பு என்றால் என்ன என்பதை உங்கள் எதிர்கால நடவடிக்கையில்தான், நான் உணர முடியும்?

அதுவரை

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் நல்ல
மாத ரறிவை கெடுத்தார்

- என்ற பாரதியின் வரிகளை நினைவூட்டி

விடைபெறுகிறேன்.

நன்றி !

Thursday 17 November 2011

இதுவல்லவா சட்டம்!


ஓரே மாதிரியான பாடத்திட்டத்தின் மூலம் சமச்சீர் கல்வி என்று சொல்வதைவிடவும் உண்மையான சமச்சீர் கல்விக்கு அடித்தளம் அமைத்திருக்கிறது தமிழக அரசு வெளியிட்டுள்ள குழந்தைகள் கல்வி கற்றல் உரிமைச் சட்டம் 2009 தொடர்பான அறிவிப்பாணை. ஏற்கெனவே பல மாநிலங்களில் கற்றல் உரிமைச் சட்டம் அமலுக்கு வந்துவிட்டது என்றாலும், தற்போதுதான் தமிழகத்தில் நடைமுறைக்கு வருகின்றது. இதைச் செய்திருக்கும் தமிழக முதல்வருக்கு பெற்றோரும் மாணவர்களும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளனர்.
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு ஒதுக்கீட்டை கட்டாயமாக்கியிருக்கும் உத்தரவுதான் உண்மையிலேயே சமச்சீர் கல்வியாக இருக்க முடியும். இந்த அறிவிப்பின் மூலம் தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் வெறும் வியாபார நிறுவனங்களாக மட்டும் செயல்படுவது தடுக்கப்பட்டிருக்கிறது. இது மக்களின் நன்மைக்காக எனும்போது இந்த நடவடிக்கை மேலும் மகிழ்ச்சியைத் தருகிறது.
தமிழ்நாட்டில் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் சரிபாதி மாணவர்கள் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில்தான் படிக்கின்றனர். தமிழ்நாட்டில் சுமார் 50 லட்சம் மாணவர்கள் மேனிலைப் பள்ளிகளில் படிக்கின்றார்கள் என்றால், இவர்களில் நான்கில் ஒரு பகுதி மாணவர்கள் (12.5 லட்சம் பேர்) மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், அதாவது தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர். இதில் 25 விழுக்காடு எனும்போது, சுமார் 3 லட்சம் ஏழை மாணவர்கள் அரசின் இந்த அறிவிக்கையால் பயன்பெறுவார்கள் என்பது உறுதி.
இந்த அறிவிப்பாணையில், மாதம் ரூ.2 லட்சம் வருவாய் உள்ள பெற்றோரின் குழந்தைகள் இந்த 25 விழுக்காடு கட்டாய ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட வேண்டும் என்று அரசு தெரிவித்திருக்கிறது. இந்த ஒரு ஷரத்து தொடர்பாக மிகத் தெளிவான, விரிவான விளக்கங்கள் சேர்த்து ஒரு துணை அறிவிப்பாணை வெளியிடப்பட வேண்டியது மிகமிக அவசியம். இதைத் தமிழக அரசு செய்யும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.
ரூ.2 லட்சம் ஆண்டு வருவாய் என்று கணக்கிடும்போது, மாதம் ரூ.16,500 சம்பளம் வாங்குபவரின் குழந்தைகள் இதற்குத் தகுதியுடையவர்களாகிறார்கள். இந்த வருமான வரம்பு சற்று அதிகமானது. ஆகையால் இத்திட்டத்தின் கீழ் ஏழைகள் போட்டிபோடுவது ஒருபுறம் இருக்க, கொஞ்சம் வசதியுள்ளவர்களும், அதிகாரத்தைப் பயன்படுத்தி குழந்தைகளைச் சேர்க்கும் செல்வாக்கு பெற்ற அரசு ஊழியர்களும்கூட இந்த வருமான வரம்புக்குள் வந்துவிடுவார்கள்.
இந்த வருமான வரம்பைக் குறைத்தால், அதற்காக லஞ்சம் கொடுத்து வருவாய்ச் சான்று பெறும் மோசடிகள்தான் நடக்கும் என்பதால், வரம்பைக் குறைக்காமல் யாருக்கு முன்னுரிமை என்பதைப் பட்டியலிடுவதன் மூலம் உண்மையான ஏழைகள் பயன்பெற வழிகாண முடியும். ஏனென்றால், இந்த மாணவர்களின் கட்டணங்களை அரசே ஏற்கப் போகிறது என்பதால், இந்த முறைப்படுத்துதல் அவசியமாகிறது.
ஒரு பள்ளிக்கு வந்துசேரும் விண்ணபங்களைப் பின்வரும் காரணிகள் அடிப்படையில் பிரித்து 25 விழுக்காடு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை நடத்த அரசு முன்வர வேண்டும். குறைந்த சம்பளம் உள்ளவர் குழந்தைக்கு முன்னுரிமை, ஒரு பெற்றோரின் முதல் குழந்தைக்கு முன்னுரிமை, பள்ளிக்கு நடந்துவரும் தூரத்தில் வசித்தால் அந்த மாணவர்களுக்கு முன்னுரிமை என வகைப்படுத்தி, மாணவர் சேர்க்கைக்கு வழிவகுக்க வேண்டியது மிக அவசியம்.
75 விழுக்காடு ஒதுக்கீட்டில் இடம்பெறும் வசதி, செல்வாக்கு இரண்டுமே உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் மற்றும் அரசு ஊழியர் குழந்தைகளுக்கு கடைசிபட்சமாகத்தான் மாணவர் சேர்க்கையில் இடம் தரப்பட வேண்டும். அவர்கள் தவிர்க்கப்பட்டால்கூடத் தவறில்லை. அரசுப் பள்ளி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களின் குழந்தைகளும் அரசுப் பள்ளிகளில் படித்தாக வேண்டும் என்று நிபந்தனை விதித்தால்தான் அந்தப் பள்ளிகள் தரமாகச் செயல்படும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
25% ஒதுக்கீட்டின்கீழ் வரும் மாணவர்களைத் தனியாக ஒதுக்கி, இரண்டாம்தரமாக நடத்தக்கூடாது என்று மிகவும் கண்டிப்புடன் அரசு சொல்லியிருப்பது, இந்தப் பள்ளிகள் எத்தகைய நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பதை அனுபவத்தால் அரசு உணர்ந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது.
இந்த அறிவிக்கையை அமல்படுத்தும் முன்பாக, தங்கள் லாபத்தில் துண்டு விழுவதைச் சுட்டிக்காட்டி, மாணவர் எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தனியார் பள்ளிகள் நிச்சயமாக முன்வைக்கும். போதுமான வகுப்பறைகள், ஆசிரியர் எண்ணிக்கை இருக்குமானால் அரசு அத்தகைய பள்ளிகளுக்கு கூடுதல் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள அனுமதிப்பதில் தவறில்லை.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பள்ளி நிர்வாகக் குழு அமைக்கும் திட்டத்தை அரசு இந்த அறிவிப்பாணையில் தெரிவித்துள்ளது. இதேபோன்ற பள்ளி நிர்வாகக் குழு ஏன் தனியார் பள்ளிகளிலும் இருக்கக்கூடாது? பள்ளித் தாளாளர் மற்றும் நிர்வாகிகள் பொறுப்புகளை நிர்வகித்தாலும், இந்த 25 விழுக்காடு இடங்களில் சேரும் ஏழைப் பெற்றோர் தங்கள் கருத்துகளை பள்ளி நிர்வாகத்திடம் எடுத்துச் சொல்லும் வாய்ப்பாக இந்த பள்ளி நிர்வாகக் குழு அமையுமே!
தனியார் கல்விக்கூடங்களில் 25 விழுக்காடு இடத்தை உறுதிப்படுத்தியுள்ள தமிழக அரசு, அடுத்ததாக அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் 25 விழுக்காட்டினருக்கு இலவச மருத்துவம் அளிக்க வேண்டிய சட்டத்தையும் ஏன் அமல்படுத்தக் கூடாது?
தனியார் மருத்துவமனைகள் சேவை அளிக்கின்றன என்ற நம்பிக்கையில் நிறைய சலுகைகள் அளிக்கப்படுகின்றன. பொதுமக்களுக்குத் தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவம் அளிப்பது கடினம் என்ற நிலையில் குறைந்தபட்சம், பள்ளி மாணவர்களுக்கு இலவச மருத்துவத்தைத் தனியார் மருத்துவமனைகள் அளிக்க வழி செய்ய முடியாதா என்ன?