பதிவுகள்

Wednesday 21 December 2011

சசிகலா நீக்கம்: பாசிச ஜெயாவை போற்றும் பார்ப்பன ஊடகங்கள் !

கூடங்குளம், பால் பேருந்து கட்டண உயர்வு, முல்லைப் பெரியாறு முதலான மக்களின் உயிராதாரமான பிரச்சினைகளுக்காக தமிழகத்தில் தீவிரமான போராட்டங்கள் வளரும் காலத்தில் சசிகலா நீக்கம் குறித்த செய்தி ஊடகங்களின் மாபெரும் சென்சேஷனாக முன்வைக்கப்படுகிறது.

அ.தி.மு.கவிலிருந்தும் அதன் அடிப்படை உறுப்பினர்கள் தகுதியிலிருந்தும் சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன் உள்ளிட்ட பன்னிரெண்டு உறவினர்கள் அடங்கிய மன்னார்குடி கும்பல் நீக்கப்பட்டது குறித்து பார்ப்பன ஊடகங்கள் மகிழ்வதோடு துள்ளிக் குதிக்கின்றன. தினமலர், தினமணி, தி ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, எக்ஸ்பிரஸ் முதலான பார்ப்பன பத்திரிகைகளும், சோ, சு.சாமி, பா.ஜ.க முதலான பார்ப்பனக் கும்பல்களும் இதை ஆரவாரத்துடன் ஆதரிப்பதோடு அதற்கு பொருத்தமான கிசுகிசு செய்திகளையும் விரிவாக முன்வைக்கின்றன. இறுதியில் ஜெயாவின் அனைத்து பாவங்களுக்கும் இந்த மன்னார்குடி கும்பல்தான் காரணமென்றும் இனி அவர் எந்த நெருக்கடியுமின்றி ‘நல்லாட்சி’யை தொடருவார் என்றும் மக்களுக்கு மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றன.

எம்.ஜி.ஆரால் திட்டமிட்டு தமிழக அரசியலுக்குள் பாசிச ஜெயா திணிக்கப்பட்ட போதும் பின்னர் அவர் வாரிசு சண்டையில் வெற்றி பெற்ற போதும் பார்ப்பன ஊடகங்கள் அவரை மற்ற திராவிட அரசியல்வாதிகளிலிருந்து வேறுபட்டு இருப்பவர் என்று போற்றிக் கொண்டாடின. நாகரீகமானவர், கான்வென்டு கல்வி கற்றவர், ஊழலற்றவர், குடும்ப பந்தங்கள் இல்லாதவர், படித்தவர், பண்பாளர், தமிழினித்தின் தனித்தன்மையை மறுத்து பாரத ஒற்றுமையை போற்றுபவர், இன வெறி இல்லாதவர், இந்துமத ஆன்மீக விசயங்களை சமரசமின்றி பின்பற்றுபவர் என்பதாக இவை நீண்டன.

திராவிட இயக்கங்களையும், தமிழ்நாட்டையும் எப்போதும் இந்தியாவுக்கு எதிரான சந்தேகப்பட்டியலில் வைத்திருக்கும் இந்திய ஊடகங்கள் அதற்கு மாற்றாக அ.தி.மு.கவையும், ஜெயாவையும் முன்னிருத்தின. பிராமணர் சங்கம், ஜெயேந்திரன், ஆர்.எஸ்.எஸ், இந்துமுன்னணி போன்ற அவாள் கட்சிகளெல்லாம் ஜெயாவை முன்னுதாரமாண இந்து அரசியல்வாதியாக போற்றி வந்தன.

90களில் ஜெயா ஆட்சியைப் பிடித்ததும் பின்னர் சசிகலா நட்பு உறுதியடைந்ததும், தொடர்ச்சியாக ஜெயா சசிகலா கும்பல் முழு தமிழ்நாட்டையும் தடுப்பார் யாருமின்றி மொட்டையடித்து கொள்ளையடித்ததுமான காலத்தில் இந்த பார்ப்பன ஊடகங்கள் அணுகுமுறை எப்படி இருந்தன?

இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக சசிகலாவை மட்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய பார்ப்பன ஊடகங்கள் பாசிச ஜெயாவை மட்டும் அதிலிருந்து நீக்கி சுத்தமானவர் என்று அறிவித்தன. அதாவது சசிகலாவின் மன்னார்குடி கும்பல்தான் 91-96 வரையிலான ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல் நடவடிக்கைகளுக்கு காரணம், ஜெயலலிதா அதை தடுக்க முடியாதபடி கட்டுண்டு கிடந்தார் என்றுதான் அவர்கள் சித்தரித்தார்கள்.

பின்னர் தேர்தலில் படுதோல்வியுற்று புறக்கணிப்ப்பட்ட காலத்தில் இந்த பார்ப்பன கிச்சன் காபினெட் சசிகலாவை மட்டும் குறிவைத்து தனிமைப்படுத்தின. அதற்கு தோதாக அப்போது இதே போல சசிகலாவை நீக்கியதாக ஜெயா அறிவித்தார். பின்னர் சேர்ந்து கொண்டார். 2001இல் ஆட்சிக்கு வந்த போதும் பார்ப்பன ஊடகங்கள் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து ஓதிக்கொண்டே வந்தன. அப்போதும் இதே போன்று நாடகம் நடந்தது. இடையில் பிரிந்து போன ஜெயா பின்னர் சசிகலாவுடன் சேர்ந்து கொண்டார்.

இப்போது 2011இல் ஜெயா ஆட்சியைப் பிடித்த பிறகும் பார்ப்பன ஊடகங்கள் நேர்மையான ஊழலற்ற ஆட்சிக்கு “மன்னார்குடி மாஃபியாவை” நீக்குமாறு விரும்பின. ஒரு வேளை அப்படி முற்றிலும் விலக்காவிட்டாலும் ஆட்சி அதிகார அமைப்புகளிலிருந்து அவர்களை தள்ளி வைக்கமாறு கோரின. துக்ளக் சோ இது குறித்து பலமுறை புலம்பியிருக்கிறார். தற்போது சசிகலா நீக்கத்திற்காக ஜெயாவுக்கு பாராட்டுமழை பொழிந்திருக்கும் சு.சாமி மாமாவும் அப்படித்தான் அடிக்கடி பேசி வந்தார். மன்னார்குடி மாஃபியா என்ற வார்த்தையே சு.சாமி அறிமுகப்படுத்திய ஒன்று.

இப்போது ஆட்சியில் அசுரபல பெரும்பான்மையுடன் இருக்கும் அ.தி.மு.க அரசை மன்னார்குடி கும்பல்தான் கட்டுப்படுத்துகிறது, தலைமை செயலகத்தில் சசிகலாவின் பினாமியான பன்னீர்செல்வம் என்ற அதிகாரிதான் உண்மையான தலைமை செயலாளராக ஆட்சியை, அதிகாரிகளை தீர்மானிக்கிறார், இதனால் பல நல்ல அதிகாரிகள் அதிருப்தி அடைந்து மத்திய அரசு வேலைகளுக்கு மாற்றுமாறு கோரினர், அமைச்சர்கள் – அதிகாரிகள் அனைவரும் சசிகலா கும்பலின் விருப்பத்தின்படியே நடந்து கொண்டனர், இறுதியில் பெங்களூரூ சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு வந்து ஜெயா ஆட்சியை இழந்தால் யாரை கொண்டுவருவது, அதற்கு சசிகலா செய்து வந்த முயற்சிகள் உளவுத்துறை மூலம் ஜெயாவுக்கு வந்து அவர் கோபம் அடைந்தார் முதலான பல செய்திகள் கிசுகிசு பாணியில் பார்ப்பன ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்படுகின்றன.

இவற்றில் உண்மை இருக்கலாம், இல்லாமலிருக்கலாம். ஆனால் சசிகலாவின் நட்புதான் ஜெயாவின் எல்லா தவறுகளுக்கும் அடிப்படை காரணமென்று பார்ப்பன ஊடகங்கள் சித்தரிக்கும் சதிதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான அரசியலாகும்.

இந்த ஆட்சியிலேயே ஜெயா கொண்டு வந்துள்ள தலைமைச் செயலக இட மாற்றம், அண்ணா நூலக இட மாற்றம், சமச்சீர்கல்வியை தடை செய்ய உச்சநீதிமன்றம் வரை சென்றும், பழையை பாடபுத்தகங்களை அச்சிட்டும் செய்த வக்கிர செலவு, மக்கள் நலப் பணியாளர்களை நீக்கியது, ஈழத்தாயாக வேடம் போட்டு பின்னர் மூவர் தூக்கை உறுதி செய்தது, கூடங்குளத்தில் போராடும் மக்களை ஆதரிப்பது போல பின்னர் எதிர்த்தது, பால் விலை, பேருந்து கட்டண உயர்வை அதிரடியாக உயர்த்தியது என்று ஏகப்பட்ட பாசிச தர்பாரை நாம் அன்றாடம் தரிசித்து வருகிறோம்.

இந்த பாசிச தர்பாருக்கும் சசிகலா நட்புக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா? என்றால் நிச்சயமாக இல்லை. இவையெல்லாம் பாசிச ஜெயா அவரளவிலேயே தனிப்பட்ட முறையிலேயே செய்த காட்டு தர்பார் நடவடிக்கைகள். இப்போது விடுங்கள், முந்தைய ஆட்சியில் கரசேவைக்கு ஆளனுப்பியது, மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்து சிறுபான்மை மக்களை அச்சுறுத்தியது, ஆடு கோழி பலி தடைச்சட்டம் கொண்டு வந்து சூத்திர-பஞ்சம மக்களை பார்ப்பனியமயமாக்க முயன்றது, ஈழம் என்று பேசுபவரை தடா,பொடாவில் உள்ளே தள்ளி கொடுமைப்படுத்தியது, ஆர்.எஸ்.எஸ் போற்றும் நடவடிக்கைகளை மனங்குளிரச் செய்தது, சாலைப்பணியாளர் நீக்கம், ஒரிரவில் இலட்சக்கணக்கான அரசு ஊழியர்களை பதவி நீக்கம் செய்தது முதலான நடவடிக்கைகள் காட்டுவது என்ன?

இவையெல்லாம் ஜெயலலிதாவை ஒரு பார்ப்பன பாசிஸ்ட் என்பதுடன் இவையனைத்தம் அவரது முழு விருப்பத்திலிருந்து மட்டுமே பிறந்திருக்கிறது என்பதையம் நாம் புரிந்து கொள்ளலாம். எனில் சசிகலாவின் நட்புக்கு எந்த பங்குமில்லையா என்றால் அப்படி இல்லை.

இதில் ஜெயாவையும் சசிகலாவையும் பிரித்து பார்த்து புரிந்து கொள்வது சரியல்ல. ஏனெனில் அ.தி.மு.க என்றொரு ஓட்டுப் பொறுக்கி கட்சி, அழகிரி ஃபார்முலாவுக்கு முன்னரேயே கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் அதே ஃபார்முலாவை கண்டுபிடித்து அறிமுகம் செய்த கட்சி, மாவட்ட அளவிலும் உள்ளூர் அளவிலும் சாராய ரவுடிகள், மணல் மாஃபியாக்கள், மதுக்கடை உரிமையாளர்கள், சுயநிதிக் கல்லூரி முதலாளிகள், ரியல் எஸ்டேட்டில் கோடிகளைக் குவிப்பவர்கள் கொண்ட கட்சியை தொடர்ந்து நடத்தவும், காசை வீசி தமது அரசியல் நடவடிக்கைகளை செய்து கொள்ளவும் ஊழல் என்பது அ.தி.மு.கவிற்கு அத்தியாவசியமான ஒன்று.

ஊழல் என்றொரு வஸ்து இல்லாமல் அ.தி.மு.கவோ இல்லை கான்வென்டு சீமாட்டி ஜெயாவோ இல்லை. முந்தைய ஆட்சிக் காலத்தில் ஜெயா-சசி கும்பல் மட்டும் கொள்ளையடிக்கவில்லை, அவர்களது உள்ளூர் தளபதிகள் அனைவரும் மும்முரமாக கொள்ளையடித்தார்கள். அந்தக் கொள்ளையும் அந்தக் கொள்ளையின் விளைவாக உருவான ஒரு ஒட்டுண்ணிக் கும்பலும்தான் அ.தி.மு.கவின் அஸ்திவாரம்.

90களில் இந்தக் கொள்ளை பாரம்பரிய முறைகளில் நேரடிப் பணம், நேரடி சொத்து குவிப்பு, என்று நடந்த போது ஏற்பட்ட பிரச்சினைகள் இப்போது இல்லை. ஊழல் என்பது ஒரு சூட்கேசில் வைத்து கொடுக்க்கப்படும் பணமாக நடப்பில் இல்லை. அது ஸ்விஸ் வங்கி போன்று தேசங்கடந்தும் ரியல் எஸ்டேட், சுயநிதிக் கல்லூரிகள், சாராய ஆலைகள் என்று சட்டபூர்வமாகவும் மாறிவிட்ட பிறகு பழைய பாணியில் சொத்து சேர்த்து பிடிபடும் நிலைமையில் ஜெயலலிதா இன்று இல்லை.

எனவே ஜெயா சசிகலாவின் நட்பு என்பது உறவுப்பூர்வமாக இருக்கிறது என்பதை விட தொழில் பூர்வமாக, அதிகார பங்கு பூர்வமாக பிணைக்கப்பட்டிருப்பது என்பதுதான் உண்மை. இதில் அவர்களது தனிப்பட்ட உறவு என்பது இத்தகைய மாபெரும் அதிகார சாம்ராஜ்ஜியத்தின் மேல்தான் நடமாடுகிறது என்பது முக்கியம். எனவே இங்கு சசிகலா போய்விட்டார் என்றால் அந்த ஊழல் சாம்ராஜ்ஜியத்தில் ஏதோ பங்கு பிரிக்கும் சண்டை நடக்கிறது என்றுதான் பொருளே தவிர மாறாக அங்கு ஊழலே பிரிந்து போய்விட்டது என்பது பாமரத்தனம்.

மேலும் அரசு, சாராய ஆலைகள், தொலைக்காட்சி தொழில் என்று ஏகப்பட்ட முறையில் பிணைக்கப்பட்டிருக்கும் ஜெயா சசிகலா நட்பு என்பது அப்படி ஒரு குழயாடிச் சண்டையால் பிரிந்து போகும் ஒன்றல்ல. அதனால்தான் இதற்கு முன்னர் அவர்கள் அப்படி பிரிந்திருந்தாலும் கூடிய சீக்கிரத்தில் ஒன்று சேர்ந்தார்கள். இந்த ஒன்றுகூடலை சாதித்தது மேற்படி பிரிக்க முடியாதபடி இருக்கும் ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் நலனை அப்படி கைவிட்டு விட முடியாதபடி இருக்கும் நிர்ப்பந்தம்தான்.

இப்போது சசிகலா நீக்கப்பட்டாலும் விரைவில் அவர் சேர்க்கப்படலாம். ஒருவேளை அப்படி சேராமல் இருக்கும் பட்சத்தில் சொத்து வாரிசுரிமைச் சண்டை நடக்கும். அப்படி ஒரு சண்டை நடக்கும் பட்சத்தில் இருவருக்கும் அது பாதகம் என்பதால் தோழிகள் மீண்டும் இணையவே வாய்ப்பிருக்கிறது. மேலும் பெங்களூருவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயா தண்டிக்கப்பட்டாலும் அவரது பினாமி மூலம் ஆட்சி தொடரும் என்பதோடு தொடர்ந்து அதிகார மையமாக அவரே இருப்பார். அதில் ஏதாவது செய்து ஜெயாவை நீக்கிவிட்டு அ.தி.மு.கவை கைப்பற்றலாம் என்றால் அதற்கு தேவைப்படும் நட்சத்திர முகம் கொண்ட தலைமைக்கு பொருத்தமாக சசிகலா கும்பலிடம் யாருமில்லை. இப்படியாக ஜெயா சசிகலா நட்பு என்பது யாரும் பிரிக்க முடியாதபடி சேர்ந்திருக்கிறது.

அடுத்து ஜெயாவின் விருப்பத்திற்கு மாறாக சசிகலா மட்டும்தான் ஆட்சியை நடத்தினார், ஊழல் செய்தார் என்பது பச்சையான பொய். இருவரும் அதை மனமொப்பி சேர்ந்துதான் செய்திருக்கிறார்கள், செய்கிறார்கள், செய்வார்கள். அதிலும் குறிப்பாக இதில் முடிவு செய்யும் உரிமை பாசிச ஜெயாவிடமே இருக்கிறது. அதற்கு ஆதாரமாகத்தான் இந்த ஆட்சியிலும், இதற்கு முன்னரும் அவர் மேற்கண்ட பாசிச நடவடிக்கைகளை பட்டியல் இட்டோம். இவையெல்லாம் ஜெயா என்றொரு தனிநபர் குறிப்பிட்ட வர்க்க, சாதி, மத பிரிவினரின் நலனுக்காக எடுத்த பாசிச நடவடிக்கைக
...

Monday 12 December 2011

ஆட்டம் போடும் அணு அரசியல்!

ஜெர்மனி அணு உலைகளை மூடுவதாக அறிவித்திருப்பதற்குக் காரணம், அந்நாட்டின் கூட்டணி அரசியல்

கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் ஜெர்மனி அதன் அணு உலைகளை மூடிவருகிறது எனச் சொல்லி வருகிறார்கள். ஜெர்மனியில் இருந்த 19 அணுமின் நிலையங்களில் காலாவதியான 2 நிலையங்கள் மட்டுமே மூடப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 17 உலைகளை இன்னும் 12 ஆண்டுகள் நடத்த ஒப்புக்கொண்டிருப்பதாக ஜெர்மன் அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகமும், அந்நாட்டின் பொருளாதார அமைச்சர் ரெய்னரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி அறிவித்தனர்.

ஜெர்மனியைப் போலவே சுவீடனும் அணுமின் நிலையங்களை மூடப் போவதாக அறிவித்திருந்தது. ஆனால், 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ம் தேதி பழுதடைந்த உலைகளுக்குப் பதிலாக புதிய உலைகளை நிறுவிக்கொள்ள சுவீடன் அரசு அனுமதி அளித்ததன் மூலம் அணுமின் நிலையங்களுக்கு எதிரான சுவீடனின் கொள்கை முடிவுக்கு வந்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.

சுவீடன் அரசும், ஜெர்மனியைப்போல் இல்லாமல், ‘நிதானமாக’ முடிவெடுக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறது. அணு மின் நிலையங்களை மூடுவதாக ஜெர்மனி அறிவித்தது ஏன்? அதற்குப்பின் இருப்பது ஜெர்மனியின் அரசியல்.

இந்தியாவைப்போல பல கட்சிகள் கொண்ட நாடு ஜெர்மனி. அவற்றுள் முக்கியமானவை இரண்டு. ஒன்று, கிறிஸ்டியன் டெமாக்ரெட்டிக் யூனியன் (CDU), மற்றது, சோஷியல் டெமாக்ரெட்டிக் பார்ட்டி. (SDP). இவற்றைத் தவிர , ஃபிரீ டெமாக்ரெட்டிக் பார்ட்டி (FDP), இடதுசாரிகள்,கிரீன் பார்ட்டி என வேறு சில சிறிய கட்சிகளும் இருக்கின்றன. கிரீன் சுற்றுச்சூழலை மையமாகக்கொண்டு செயல்படும் கட்சி.

பல ஆண்டுகளாக ஜெர்மனியில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏதாவது ஒரு பெரிய கட்சி மற்றொரு சிறிய கட்சியோடு சேர்ந்து அரசமைப்பதே வழக்கமாக இருந்து வருகிறது. இப்போது CDU, சிறிய கட்சியான FDPயோடு சேர்ந்து ஆட்சியில் இருக்கிறது

1998லிருந்து 2005 வரை இரண்டு முறை கிரீன் பார்ட்டி பெரிய கட்சியான SDPயுடன் சேர்ந்து ஆட்சியில் இருந்தது. அப்போது அந்தக் கட்சியைச் சேர்ந்தவர் துணைப் பிரதமராகவும் வெளியுறவு அமைச்சராகவும்இருந்தார். ஜெர்மன் சட்டங்களின்படி ஒரு கட்சி நாடாளுமன்றத்தில் இடம் பெற வேண்டுமானால், குறைந்தபட்சம் 5 சதவீத வாக்குகள் வாங்க வேண்டும். கிரீன் பார்ட்டி அந்தத் தேர்தலில் 6 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக வாங்கியிருந்தது.

விரைவிலேயே சிவப்பு - பச்சைக் கூட்டணியில் (ஜெர்மனியில் கூட்டணிகளை அந்தந்தக் கட்சிக் கொடிகளின் வண்ணங்களை வைத்தே குறிப்பிடுகின்றனர். SDPயின் நிறம் சிவப்பு; CDUயின் நிறம் கறுப்பு; FDPயின் நிறம் மஞ்சள்) பிரச்சினை முளைத்தது. யுகோஸ்லேவியாவிலிருந்து செர்பியா, கொசாவா பிரிந்தபோது கொசாவா நாட்டிற்கு ஜெர்மன் அரசு படைகளை அனுப்பியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கிரீன் கட்சியிலிருந்து பலர் விலகினார்கள். கட்சி, அடுத்து நடந்த மாநிலத் தேர்தலில் தோல்விகளைச் சந்தித்தது.

அப்போதுதான் கிரீன் கட்சி, அணுமின் நிலையங்கள் விஷயத்தைக் கையில் எடுத்தது. SDPக்கு தர்மசங்கடமாகப் போனது. ஏனெனில், அதன் உறுப்பினர்களில் பலர் அதை ஏற்கவில்லை. ஆனால், அரசைக் காப்பாற்றிக்கொள்ள மெல்ல மெல்ல, அதாவது 2010க்குப் பின், அணு உலைகளை மூடுவதற்கு ஒப்புக் கொண்டது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த, இப்போது ஆளும் கட்சியாக உள்ள CDUவும் அன்று அணு உலைகளை மூடுவதை எதிர்த்தது.

இந்த ஆண்டு மார்ச் இறுதியில் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில், கிரீன் பார்ட்டி கணிசமான வெற்தீவூளப் பெற்றது. ஒரு வளம் மிகுந்த மாநிலத்தில், அறுபது ஆண்டுகாலமாக ஆட்சியில் இருந்த CDUயை (அதுதான் இப்போது மத்தியில் ஆண்டு கொண்டிருக்கும் கட்சி) வீழ்த்தி, ஆட்சியைக்கைப்பற்றியது. கட்சி துவங்கி, 30 ஆண்டுகளில் இப்போதுதான் அது முதல் முறையாக ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கிறது.

CDUவின் தோல்விக்கு ஒரு முக்கியக் காரணம், வாகனங்களில் பெட்ரோலோடு 10 சதவீதம் ஆல்கஹாலையும் கலந்து பயன்படுத்த வேண்டும் என சில மாதங்களுக்கு முன், அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டது. இதன் காரணமாக விளைநிலங்களில் தானியங்களுக்குப் பதில், பயோ ஃபூயலுக்கு உதவும் பயிர்களை மக்கள் பயிரிட ஆரம்பித்து விடுவார்கள் என எதிர்ப்பு எழுந்தது. அதனால், அது போன்ற நிலங்களுக்கு வரியை உயர்த்தியது அரசு. சுற்றுச்சூழல் ஆதரவாளர்கள் இதைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

கீரின் பார்ட்டியின் வெற்றியைக் கண்டு உஷாரான CDU, அவர்களது கோரிக்கையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தது. அதாவது, முன்னால் அணு உலைகளை மூட எதிர்ப்புத் தெரிவித்த CDU, இன்று அணு உலைகளை 2022க்குள் படிப்படியாக மூடப் போவதாக அறிவித்திருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ஜெர்மனி எடுத்துள்ள முடிவுக்குப் பின்னால் இருப்பது, சுற்றுச்சூழல் அல்ல, பாதுகாப்பு அல்ல, கூட்டணி அரசியல்.

ஆனால், அந்த முடிவுக்கு எதிரான முணுமுணுப்புகள் கிளம்பியிருக்கின்றன. அணுமின் உலைகளை மூடிவிட்டு காற்றலைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க வேண்டுமானால், ஜெர்மனியின் வடக்குப் பகுதியில் கடலோரமாகக் காற்றாலைகளை அமைக்க வேண்டும். இப்போதுள்ள அணுமின் நிலையங்கள் ஜெர்மனியின் தொழில் நகரங்களான மியூனிக், ஸ்ட்ரட்கார்ட் ஆகியவற்றுக்கு அருகில் நாட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளன. எனவே, வடக்குப் பகுதியிலிருந்து உயர் வோல்ட்டேஜ் கேபிள்கள் அமைத்து, மின்கோபுரங்கள் நிறுவி, மின்சாரத்தைஎடுத்துச் செல்ல வேண்டும். அப்படி கேபிள்கள் அமைப்பதற்கும், மின்கோபுரங்கள் நிறுவுவதற்கும் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே உள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்துகிறார்கள். அதனால், என்ன செய்வது என்று தெரியாமல் அரசு முழிக்கிறது.

வேறு ஒரு பிரச்சினையும் எழுந்துள்ளது. மின்சாரத்தை வீணடிக்காத வகையில் கட்டிடங்களை அமைப்பதன் மூலம், 10 சதவீதம் மின் பயன்பாட்டைக் குறைக்கலாம் என அரசு சொல்கிறது. அதெல்லாம் பேசுவது சுலபம், ஆனால், வேலைக்காகாத காரியம் என சிலர் சொல்கிறார்கள். இது, கடைசியில் நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதில்தான் போய் முடியும். கரியைப் பயன்படுத்துவதை அதிகரித்தால், அது வளி மண்டலத்தில் மாசை அதிகரிக்கும், அதனால், பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் என அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

அரசில் இருப்பவர்கள்வேறு விதமான கவலைகளை எழுப்புகிறார்கள். அணுமின் நிலையங்களை ஜெர்மனி மட்டும்தான் மூடுகிறது. அண்டை நாடான பிரான்ஸ் மூடவில்லை. இன்னொரு அண்டை நாடான போலந்து மேலும் இரண்டு உலைகளைத் திறந்திருக்கிறது. எனவே, இனி வரும் நாள்களில் ஜெர்மனி, பிரான்சிடமிருந்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்படும் (ஏற்கெனவே தேவை உச்சத்திற்குப் போன நாட்களில் அது அவ்வாறு வாங்கியிருக்கிறது). நாட்டின் பொருளாதாரம் அயல் நாட்டைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுவிடும் என்பது அவர்களது கவலை.

முழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் தவிக்கிறது ஜெர்மனி.

Saturday 10 December 2011

கனிகிற வேகத்தில் வெம்பி விட்டீர்களே!



சென்னை விமான நிலையம்














சிஐடி காலனி






கனிமொழியை பார்க்க வந்த   திமுக 
முன்னணி தலைவர்கள்  









பகுத்தறிவுப் பகலவன் வீட்டில் உடைக்கப் பட்ட திருஷ்டி பூசணிக்காய்


ஆரத்தி

ஜெகதரட்சகன் வந்த 2 கோடி ரூபாய் போர்ஷ் கார்

கனிமொழியை புகைப்படமெடுக்க போட்டி போடும் பத்திரிக்கையாளர்கள்

ஒரே நாளில் ஸ்டாலினை விட "பெரிய" தலைவரான கனிமொழி



முடியலடா ..... !!!!!


width=/divquot;,MsoNormal