அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநிதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது.
இந்த வழக்கு விசாரணை, நீதிபதிகள் அப்தாப் ஆலம்,ஆர்.எம். லோதா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது. நிர்மோகி அகாரா, அகில பாரத இந்து மகா சபா,ஜமாத் உல் அமாஹி ஹிந்த், சன்னி சென்ட்ரல் வஃக் போர்டு உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் மேல் முறையிடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநிதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்தது.
மேலும், உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு "புதிரானது" என்றும் கருத்து தெரிவித்துள்ளது.