பதிவுகள்

Saturday 30 July 2011

அந்த நாள் முதல் இந்த நாள் வரை -திமுக தலைவர்


பொய் வழக்கு போடுவதில் ஜெயலலிதாவை மிஞ்சுவதற்கு யாருமே இல்லை. காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட வழக்கில், தமிழக அரசு தேவையற்ற ஆர்வத்தைக் காட்டுவது மற்றுமின்றி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் எந்த அளவிற்கும் செல்லத் தயாராக உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்தையும் குறிப்பிட்டுள்ளார்.

எம்ஜிஆர் நினைவக காப்பாளர் முத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மருமகன், மதுரை இளம்பெண் செரீனா மீது கஞ்சா வழக்கு ஆகியவற்றை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். 2001ல் ஆட்சிக்கு வந்த ஒரு மாத காலத்திலிலேயே நள்ளிரவில் படுக்கை அறைக்குள் நுழைந்து காவல் துறையினரால் தான் கைது செய்யப்பட்டதையும், அந்த வழக்கில் குற்றப்பத்திரிகையாவது தாக்கல் செய்ய முடிந்ததா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த வழக்கில் மு.க.ஸ்டாலின், முரசொலி மாறன், டி.ஆர்.பாலு, பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், மு.க.அழகிரி ஆகியோர் கைது செய்யப்பட்டது பழிவாங்கும் போக்கின் பிரதிபலிப்புகள் என்று கலைஞர் கூறியுள்ளார்.

1995ல் டான்சி ஊழல் வழக்கில், ஜெயலலிதா மீது வழக்கு தொடர அன்றைய ஆளுநர் சென்னா ரெட்டி அனுமதி அளித்தார் என்பதற்காக அவரை பழிவாங்கும் நோக்கில் சென்னா ரெட்டி தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று சட்டப்பேரவையிலேயே குற்றம் சாட்டியது கடைந்து எடுத்த பொய் என்று அனைவரும் உணர்ந்துகொள்ளவில்லையா என்றும் கலைஞர் கூறியுள்ளார்.


ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரனுக்கு 100 கோடி ரூபாய் செலவில் திருமணம் செய்துவைத்து, பின்னர் ஹெராயின் வழக்கு போட்ட பழைய கதையை எவரும் மறந்து விடவில்லை.

எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குகள் போட்டு கொடுமைப்படுத்துவது ஜெயலலிதாவிடம் ஆழமாக ஊன்றிவிட்ட பழக்கம். அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோதும், நிலஅபகரிப்பு என்ற கற்பனையான காரணத்தைக் காட்டி எதிர்க்கட்சியினரை மட்டும் பழிவாங்கி, குற்றம் சுமத்திடும் பாதகச் செயலை தொடங்கியிருக்கிறார்.


இந்த வகையில்தான் அமைச்சர்களாக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, மதுரை மாவட்டச் செயலாளர் தளபதி ஆகியோர் மீது பொய் வழக்கு போட்டு இழத்தடிக்கின்றனர்.


திமுகவை பழிவாங்குவதற்கு தவறான ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார் ஜெயலலிதா என்றும், பழிவாங்குவதற்காக பொய் வழக்குகள் புனைவதிலே ஜெயலலிதா கைதேர்ந்தவர், பொய் வழக்குகளில் பழகிப்போனவர், அதில் ஒருவகை சுகம் காண்பவர் என்று திமுக தலைவர் கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளா
ர்.