தமிழக பட்ஜெட் 2011 முக்கிய அம்சங்கள் :
- சென்னை மாநகர குடிநீர் சேமிப்பு கொள்ளளவு 4.20 டி.எம்.சியாக உயர்த்தப்படும்.
- ஓசூரில் சர்வதேச தரத்துடன் கோழி வளர்ப்பு மேலாண்மை மையம் அமைக்கப்படும்.
- சூரிய சக்தி தெருவிளக்கு திட்டத்துக்கு ரூ.248 கோடி ஒதுக்கீடு. ஆண்டுக்கு 20 ஆயிரம் கிராமங்கள் வீதம் அமல்படுத்தப்படும்
- போடிநாயக்கனூரில் புதிய அரசு பொறியியல் கல்லூரி தொடங்க ஏற்பாடு.
- நடப்பு நிதியாண்டில் கலப்பின மாடுகள் வழங்க ரூ.56 கோடி ஒதுக்கீடு.
- தீயணப்புத்துறை புதிய கருவிகள் வாங்க நவீனப்படுத்த புதிதாக 10 கட்டடங்கள் கட்டத் திட்டம். இதற்கு ரூ.170 கோடி ஒதுக்கீடு.
- 5 ஆண்டுகளில் 60 ஆயிரம் கறவை மாடுகள் வழங்கப்படும்
- ஏழை குடும்பங்களுக்காக தலா 4 ஆடுகள் வீதம் வழங்க ரூ.135 கோடி ஒதுக்கீடு.
- நடப்பு நிதி ஆண்டில் 111 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி.
- ஸ்ரீரங்கம் தொகுதியில் தேசிய சட்டப்பள்ளி அமைக்க வழி வகை செய்யப்படும்.
- ரூ.130 கோடியில் நீதிமன்றங்களுக்கு சொந்த கட்டடம் கட்டித் தரப்படும்.
- காவிரி ஆற்றின் குறுக்கே முத்தரச நல்லூரில் தடுப்பணை கட்டப்படும். இதற்கான ஒதுக்கீடு ரூ.32 கோடி.
- சென்னை அருகே கடல்நீரை குடிநீராக்கும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
- ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.
- சிறைச்சாலை மேம்பாட்டுக்காக ரு.117 கோடி ஒதுக்கீடு.
- சென்னை மாநகர காவல்துறையுடன் புறநகர் காவல்துறை இணைக்கப்படும்.
- காவல்துறையை நவீனப்படுத்த ரூ.51 கோடி ஒதுக்கீடு.
- 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் பசுமைக்குடில் அமைக்கப்படும்.
- கூட்டுறவு விற்பனை இணையத்துக்கான வட்டியில்லா முன்பணம் ரூ.150 கோடியாக உயர்வு.
- காய்கறி, தோட்டக்கலைப் பயிர் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை.
- வட்டியில்லா பயிர்க்கடனாக ரூ.3 ஆயிரம் கோடி வழங்க இலக்கு.
- கூட்டுறவுத் துறை மூலம் கடன்பெற்று உரிய முறையில் திருப்பி செலுத்துவோருக்கு சலுகை.
- நெல்லை, ஒரத்தநாடு பகுதிகளில் புதிதாக கால்நடை மருத்துவ கல்லூரிகள்.
- ஏரி, அணை, கால்வாய்கள் ரூ.367 கோடி செலவில் சிரமைக்கப்படும்.
- நாகை, பழையாறில் நவீன மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும்.
- ரூ.74 கோடியில் புதிய மீன் இறங்குதளங்கள் அமைக்கப்படும்.
- 13 மீன் பிடி நகரங்களில் மீன் பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும்.
- விசைப்படகுகள் எண்ணிக்கை உயர்த்த திட்டம். அதன்படி, நடப்பு ஆண்டில் புதிதாக 500 விசைப் படகுகள் வழங்க மானிய விலையில் கடன் ஏற்பாடு செய்யப்படும்.
- ஆழ்கடல் மீன் பிடிப்பு ஊக்குவிக்க நடவடிக்கை.
- சேலம் மற்றும் திருநெல்வேலியில் சைபர் க்ரைம் குற்றப்பிரிவு நிறுவப்படும்.
- மானிய விலையில் 5 ஆயிரம் புல்வெட்டிகள் விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
- உணவு தானிய சேமிப்புக் கிடங்குகளுக்கு ரூ.237 கோடியில் திட்டம் அமல்படுத்தப்படும்.
- நுண்ணுயிர் பாசன திட்டம் அமைக்க விவசாயிகளுக்கு நூறு சதவீத முன்னுரிமை அளிக்கப்படும்.