பதிவுகள்

Saturday 12 March 2011

கருணாநிதியின் கைக்௬லி காதர் முஹைதீன்!? உடையும் தருவாயில் முஸ்லீம் லீக்

நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொதுக்௬ட்டத்தில் பேசும்போது நாம் கேட்காமலே முஸ்லிம்களுக்கு நன்மைகள் செய்யக்௬டியவர் கருணாநிதிதான்! என்றும் முஸ்லிம்களின் பாதுகாவலர் என்று பேசுகிறார். முஸ்லீம் லீக் பொதுக்௬ட்டங்கள் கருணாநிதியை புகழ் வதடக்கே நடதபெருகின்றன. எல்லா சமுதாயமும் கைகழுவிட்ட கருணாநிதியை காதர் முஹைதீன் புகழும் அளவுக்கு திமுக வினர்௬ட புகழ்வதில்லை. மூன்றாண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சிக்கு மூன்று இடங்கள் கொடுத்த அதிமுக எவ்வளவோமேல். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காலன் கொங்கு முன்னேற்ற கழகத்திற்கு 7 தொகுதிகள் ஒதுக்கும் திமுக பாரம்பரியம் கொண்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அளித்த மூன்றில் கூட ஒன்றை குறைத்து விட்டாரே? இன்னும் நீங்கள் கருணாநிதிக்கு துதி பாட காரணம் என்ன ? பாபர் மஸ்ஜித் தீர்ப்பை வரவேற்ற கருணாநிதி முஸ்லிம்களின் பாதுகாவலரா? முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போடுவதற்கு அடிகோவியவர் கருணாநிதிதான்!  தொகுதியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட  ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. சென்ற தேர்தலிலும் பாளையம்கோட்டை தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கொடுத்துவிட்டு பின்னர் தனது கட்சிக்கு பிடிங்கியவர்தான் கருணாநிதி! இதை வேறு சமுதாய மக்களிடம் காட்ட முடியுமா? குட்ட குட்ட குனிவதட்க்கு நாம் நாதி அற்று போய விட்டோமா ? என்று என்னும் அளவிற்கு உள்ளது. திமுகவின் சிறுபான்மை பிரிவாகசெயல்படும்  
உங்களை போன்ற ஜால்ராக்கள் இருக்கின்ற வரை முஸ்லிம் சமுதாயம் கருவேப்பில்லையாக மட்டுமே பயன்படுத்தப்படும்! வரும் சட்ட மன்ற தேர்தலில் சமுதாயம் தக்க பாடம் புகட்ட வேண்டும் இந்த கருணாநிதியின் கைக்கூலிக்கு !
அதிமுக கூட்டணியில் மூன்று தொகுதி பெற்ற மனிதநேய மக்கள் கட்சி யை விமர்சித்த சகோதர இயக்கங்கள் காதர் முஹைதீனை கண்டுகொள்ளதாது ஏன் ?