பதிவுகள்

Wednesday 2 March 2011

ஜெ., : 4ம் தேதி விஜயகாந்துடன் சந்திப்பு

அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, தே.மு.தி.க.,வுடனான தொகுதி பங்கீடு அறிவிப்பு, வரும் நான்காம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது. அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவை, நான்காம் தேதி விஜயகாந்த் சந்தித்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவுள்ளார் என, இரு கட்சி வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.தற்போது தேய்பிறை நடந்து வரும் நிலையில், இந்த காலகட்டத்தில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதை தே.மு.தி.க., விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. தேய்பிறை முடிந்து, வரும் 4ம்தேதி அமாவாசை வருவதால், அன்று இரு கட்சிகளுக்கிடையே கூட்டணி உடன்பாடு ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து அறிவிக்கும் வகையில், வரும் 4ம்தேதி ஜெயலலிதாவை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின் முடிவில், தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, அறிவிப்பு வெளியாகவுள்ளது.