பதிவுகள்

Tuesday 1 March 2011

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மறியல்

அருள்மிகு நெல்லையப்பர் கோயில்முன் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஞாயிற்றுக்கிழமை மறியலில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் 310 பேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி நகரம் வடக்கு ரதவீதியில் நடைபெற்ற மறியலுக்கு, அக் கட்சியின் நிறுவனத் தலைவர் எஸ். ரஃபீக் தலைமை வகித்தார்.
கொள்கை பரப்புச் செயலர் முஸ்தபா, மாநகரச் செயலர் இம்தியாஸ் மீரான், மாவட்டத் தலைவர் ஷேக், தலைமைக் கழகச் செயலர் ராஜா, மாவட்டத் துணைத் தலைவர் மைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கோயில்முன் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மறியலில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதற்கிடையே டாஸ்மாக் மேலாளர் செல்வராஜ், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் ஒரு மாதத்துக்குள் டாஸ்மாக் கடையை அகற்றிவிடுவதாக அவர்கள் உறுதி அளித்ததாக எஸ். ரஃபீக் தெரிவித்தார்.
மறியலில் ஈடுபட்ட 310 பேர் கைது செய்யப்பட்டு பின்பு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.