காஞ்சிபுரத்தில் நாடி ஜோதிடம் பார்க்கச் சென்ற தேர்தல் பார்வையாளர்கள், பத்திரிகையாளர்களைக் கண்டதும் ஓட்டம் பிடித்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில், தேர்தல் பணிகளை கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் நேற்று காஞ்சிபுரம் பெரியார் நகரில், நாடி ஜோதிடம் பார்க்கச் சென்றனர். தகவல் அறிந்து பத்திரிகையாளர்கள் சென்றனர். நாடி ஜோதிடம் அலுவலகம் வெளியே நிறுத்தப்பட்டிருந்த தேர்தல் பார்வையாளர்களின் கார்களை புகைப்படம் எடுத்தனர். தகவல் அறிந்து, வெளியே வந்த தேர்தல் பார்வையாளர்கள் வேகமாக காரில் ஏறி பறந்தனர்.