பதிவுகள்

Sunday 20 March 2011

வைகோவுக்கு ஜெ., கடிதம்!

அ.தி.மு.க.,வில் தங்களது தலைமையிலான ம.தி.மு.க.,வும் கடந்த 2006 ம் ஆண்டு முதல் அங்கம் வகித்து வருகிறது. நடைபெற இருக்கும் 2011 ம் சட்டமன்ற தேர்தலில் தமிழக அரசியல் சூழ்நிலைகளையும், அ.தி.மு.க,., தலைமையிலான கூட்டணியில் பல கட்சிகள் இடம் பெற்றிருப்பதையும் முதிர்ந்த அரசியல்வாதியான நீங்கள் நன்கு அறிவீர்கள் . எனவே உங்கள் கட்சிக்கு 21 தொகுதிகள் ஒதுக்க முடியாது. 12 தொகுதிகள் ஒதுக்கி தருகிறோம் என்று பொருளாளர் பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர் மூலம் உங்களுக்கு சொல்லி அனுப்பினேன். இருப்பினும் தாங்கள் தேர்தலை புறக்கணிக்கும் என்ற அறிவிப்பு மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது. தங்களது கட்சியின் முடிவு நிலை குறித்து தாங்கள் முடிவு எடுக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. இருப்பினும் உங்கள் அன்பு சகோதரியின் நன்மதிப்பும், அன்பும் உங்கள் மீது எப்போதும் இருக்கும். -வைகோவுக்கு ஜெ., கடிதம்!